அட்டாளைச்சேனையில் 13 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்
19 Nov,2019
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.ஏ.ஆர்.ஆக்கிலா முன்னிலையில் இன்று (18) ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டது.
குறித்த சிறுமி அட்டாளைச்சேனை கடற்கரை பிரதேசத்தில் உள்ள தனது சகோதரி வசித்துவரும் வீட்டுக்கு கடந்த 15 ஆம் திகதி சென்று பகல் உணவு உட்கொண்டு விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஆட்டோவில் வந்த சிறுமியின் உறவினர் ஒருவர் , குறித்த சிறுமியிடம் ஆட்டோவில் ஏறுமாறும் வீட்டில் கொண்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆட்டோவில் ஏறிய சிறுமியைக் கடத்தி அட்டாளைச்சேனை கடற்கரையில் உள்ள மீனவர்வாடி ஒன்றுக்குள் அழைத்துச் சென்று அங்கு தேநீர் அருந்துமாறு வற்புறுத்தி குடிக்க வைத்து தங்கவைத்துள்ளார்.
அதன் பின்னர் மயக்கமுற்ற சிறுமி அடுத்த நாள் 16 ஆம் திகதி காலை மயக்கம் தெளிந்து வீடு வந்து தாயுடன் சென்று பள்ளிவாசல் நிருவாகத்திடம் முறையிட்டுள்ளார்.
அதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அதன் பின்னர் பொலிஸார் நேற்று 17 ஆம் திகதி சந்தேக நபரை கைது செய்து விசாரணையின் பின்னர் இன்று (18) நீதிமன்றில் ஆஜர்படுத்திளனர்.
இதேவேளை சிறுமிக்கு மயக்க மருந்தை தேநீரில் கலந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.அன்சார் தெரிவித்தார்.