நள்ளிரவில் மாணவிக்கு மெசேஜ்ஸ சிக்கிய பேராசிரியர்!’-
16 Nov,2019
பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என உத்தரகாண்ட் ஆளுநர் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் பந்த் (Pantnagar) நகரில் அமைந்துள்ள விவசாய கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்கள் விடுதியின் காப்பாளராக இருக்கும் பேராசிரியர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.
மாணவிக்கு பிறந்தநாளுக்கு நள்ளிரவில் வாழ்த்து கூறியுள்ளார். ஆசிரியர் என்ற முறையில் மாணவியும் பதிலளித்துள்ளார். அதன்பின் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்புவதும் நள்ளிரவில் போன் செய்வதுமாக இருந்துள்ளார்.
பேராசிரியர் என்பதால் மற்ற மாணவிகளிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து போன் செய்து வந்துள்ளார். அந்த மாணவி அவரது அழைப்பை எடுப்பதில்லை.
ஒரு நாள் மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார், “என் மனைவி வீட்டில் இல்லை. யார் எனக்கு சமைத்து தருவார், நீ வருகிறாயா ” எனக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பேராசிரியர் மீது மாணவி பல்கலைக்கழக துணை வேந்தரிடம் புகார் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அனுப்பிய செய்திகளை அந்தச் சிறுமி ஆதாரமாகக் காட்டினார்,
ஆனால் பல்கலைக்கழகக் குழு பேராசிரியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அக்டோபர் மாதம் நடந்துள்ளது. மாணவி எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்காத்தால் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பாட்னா பல்கலைக்கழக மாணவர் நலக் குழு அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
பாட்னா பல்கலைக்கழக தரப்பில் கூறுகையில், “ இந்த சம்பவம் அக்டோபர் மாதம் நடந்தது. மாணவியின் புகாரையடுத்து உடனடியான விடுதி காப்பாளர் பொறுப்பில் இருந்து அந்த பேராசிரியரை நீக்கிவிட்டோம்” என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில அளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அம்மாநில ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான சூழல் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அறிக்கை கோரியுள்ளார்.