பிரை-மார்க் கடையில் வைத்து இளம் பெண்களைஸ சிக்கிய உதின் என்னும் செக்கியூரட்டி
13 Nov,2019
பிரைமார்க் என்னும் கடை, பிரிட்டனில் பல இடங்களில் உள்ளது. இதில் ஒரு கடையில் செக்கியூரட்டியாக வேலை பார்த்து வந்த உதின் என்னும் 27 வயது வாலிபர், பல பெண்களிடம் செய்த சில்மிஷங்கள் தற்போது வெளியாகி பிரித்தானியாவையே உலுப்பியுள்ளது. உதின் வழமையாக கடையில் உள்ள CCTV ஐ கண்காணிக்கும் நபர் ஆவார். சில இளம் பெண்கள், அதிலும் 18 வயதுக்கு குறைவான பெண்கள், குறித்த கடையில் சில பொருட்களை திருடுவது வழக்கம். இதனை கண்டு பிடித்தால். உடனே அந்தப் பெண்ணை விசாரணை என்ற போர்வையில் அழைத்துச் சென்று.
யாரும் இல்லாத தனது ஆபிசில் வைத்து, அப்பெண்ணை முதலில் மிரட்டுவது. பொலிசார் அல்லது வீட்டிற்கு போன் செய்து பேசப்போகிறேன் என்று அவர்களை மிரட்டி. பின்னர் அவர்களை அடிபணிய வைத்து, தனது காம இச்சைகளை தீர்த்து வந்துள்ளார். இது போல உதில் பல பெண்களோடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாம் திருடி மாட்டிக் கொண்டு விட்டோமே என்ற குற்ற உணர்வில் இருக்கும் அந்த சிறுமிகள், என்ன செய்வது என்று தெரியாமல் உதின் செல்வதை கேட்டு நடந்துள்ளார்கள். இதனை இவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு 2 பெண்கள் சிக்கவே, அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று. தனது சில்மிஷங்களை காட்டியுள்ளார். ஆனால் அவர்கள் மிக சாதூரியமாக அங்கிருந்து தப்பிவிட்டார்கள். பின்னர் அவர்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உதினை பொலிசார் விசாரித்து வரும் வேளை. தகவல் ஊடகங்களில் கசியவே மேலும் பல பெண்கள் தம் பெயர் குறிப்பிட விரும்பாமல், தமக்கும் இது போல நடந்தது என்று உதின் மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்கள். மச்சானுக்கு மாமியார் வீடு உறுதி என்றாகிவிட்டது போங்கள்.
பின் குறிப்பு: உதின் யார் என்பது சிலருக்கு தெரியும். . இவர் குற்றவாளி என்று தற்போது நீதிமன்றத்தால் இனம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.