வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்.!
12 Nov,2019
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நரேஷ் என்பவக்கு 17 வருடங்களுக்கு முன்னர் சாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இத்தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நரேஷுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே எப்பொழுதும் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.
நரேஷ் குடித்துக்கொண்டிருந்த போது அவருடைய மனைவி தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் சாந்தியின் தலையை அரிவாளால் வெட்டியுள்ளார்.தலையில்லாமல் முண்டமாக இருந்த சடலத்தை நரேஷ் வேறொரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். சாந்தியின் தலையை ஒரு டப்பாவுக்குள் மூடி வைத்துள்ளார். மறுநாள் காலையில் குழந்தையுடன் தாயின்றி கத்தியுள்ளனர்.
மூத்த மகள் சென்று எட்டிப்பார்த்தபோது தாய் தலையில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றாள். உறவினர்கள் வருவதற்குள் சாந்தியின் தலையுடன் நரேஷ் காவல் நிலையத்தை சென்றடைந்தார்.
நரேஷை மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தின் போது மது அருந்தவில்லை என்றும் மனைவியின் கள்ளக்காதலினாலேயே அவரை கொலை செய்ததாகவும் நரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.