53 குடியேறிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்கு வருகை
11 Nov,2019
ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியேறிகள் ஒரே நாளில் சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிறிய படகொன்று எல்லை பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு படகுகள் இரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த படகுகளில் இருந்த 53 பேர் டோவருக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டு குடிவரவு அதிகாரிகளின் விசாரணைக்கு அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறைந்தது 74 குடியேறிகளை ஏற்றிவந்த ஆறு படகுகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த ஆண்டு 1500 க்கும் மேற்பட்ட குடியேறிகள் சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது