கல்வி சுற்றுலா” பெயரில் மாணவிகளை சீரழித்த டியூஷன் மிஸ் சஞ்சனா!
09 Nov,2019
சென்னை: சஞ்சனா டீச்சர் நல்லவங்கதானாம்.. ஆனால், காதலன் பாலாஜியின் பிடியில் சிக்கி கொண்டதால்தான், மாணவிகளை விருந்தாக்க வேண்டியதாக போய்விட்டதாம்..
எனினும் சஞ்சனா டீச்சர் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்த பெரும்பாலான தகவல்கள் வெளி வராமலே உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை தி.நகரை சேர்ந்த சஞ்சனாவுக்கு வயசு 28 ஆகிறது.. நன்றாக படித்துள்ளார்.. அதனால்தான் வீட்டிலேயே டியூசன் சென்டர் நடத்தி, 10,11, 12ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்த மகளின் அழுதுவீங்கிய முகத்தையும், கலைந்த ஆடையையும் பார்த்து பதறிய பெற்றோர், விசாரிக்கவும்தான் சஞ்சனா, அவரது காதலன் பாலாஜியின் சுயரூபம் வெளியே தெரிய ஆரம்பத்தது. பதறிய பெற்றோர், மாம்பலம் மகளிர் போலீசில் புகார் தர விசாரணை வேகமாக நடந்தது.
அந்த டியூசன் சென்டரிலேயே படுக்கை அறை ஒன்றை ஸ்பெஷலாக ரெடி பண்ணி உள்ளார் சஞ்சனா.
அழகாக இருக்கும் மாணவ, மாணவிகளை செலக்ட் செய்து, அவர்களை ஒன்றாக சேர்த்து அந்த பெட்ரூமில் நிர்வாணமாக நிற்க வைத்து டிசைன் டிசைனாக போட்டோக்கள் எடுப்பது முதல், படிக்கும் மாணவிகளை ஈசிஆர் ரோடு சொகுசு பங்களாவில் பாலாஜி மிரட்டி பணிய வைத்து, அவர்களுடன் நெருக்கமாக இருந்தது வரை விஷயம் அம்பலமானது.
வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சஞ்சனா.. காஸ்ட்லியான அபார்ட்மென்ட்டில் பெற்றோருடன் குடியிருந்து வருகிறார். டியூஷனுக்கு வரும் மாணவிகளும் பெரிய இடத்து பிள்ளைகள் என்கிறார்கள். அவர்கள் காரில்தான் டியூஷன் படிக்க வருவார்களாம்.
அதேபோல, அந்த அப்பார்ட்மென்ட் மக்களிடம் நல்ல முறையில் பழகி வந்துள்ளார் சஞ்சனா. இவர் வீட்டு பக்கம் குடியிருந்தவர்தான் பாலாஜி. செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அதற்கு பிறகு அந்த வேலைக்கும் போகாமல் இருந்திருக்கிறார். அப்போதுதான் சஞ்சனாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.
சஞ்சனா உண்மையிலேயே பாலாஜியை விரும்பி உள்ளார். ஒரு கட்டத்தில் பாலாஜி சரியாக பேசாமல் போகவும், அதை சஞ்சனாவால் தாங்க முடியவில்லை.
தன்னை விட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சஞ்சனா கேட்டதற்கு, அதற்கு பதிலாக பாலாஜி கேட்டது டியூஷன் மாணவிகளை!
உல்லாசம் ஒரு பக்கம், மாணவிகளை மிரட்டி பணம் ஒரு பக்கம் என பாலாஜி குஷியில் புரண்டு இருக்கிறார்.
ஆனால், இந்த பாலாஜிக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
சொகுசு பங்களாவுக்கு மாணவிகளை அழைத்து செல்லும்போது, அதற்கு “கல்வி சுற்றுலா” என்று இவர்கள் பெயரை வைத்துள்ளனர்
நம்பி டியூஷனுக்கு அனுப்பிய பெற்றோர் பதைபதைத்து உள்ள நிலையில், சஞ்சனா விவகாரம் என்ன ஆனது, எத்தனை மாணவிகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், என்ற விவரங்கள் எல்லாம் மொத்தமாக இன்னும் வெளிவராமல் உள்ளதாக தெரிகிறது.
எனினும் மாணவிகள் சம்பந்தப்பட்ட சென்சிடிவ் விஷயம் என்பதால், போலீசார் இந்த விஷயத்தை நாசூக்காகவும், அதே நேரத்தில் சீரிய முறையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்