10 பேரைவிஷம் வைத்துக் கொன்ற மந்திரவாதி!
06 Nov,2019
பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றியதுடன் பத்து பேரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்த நபரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 20 மாதங்களாக பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்த எலுருவை சேர்ந்த வெல்லங்கி சிம்மாதிரி என்ற சிவா மேலும் 20 பேரை சயனைடு வைத்து கொல்ல திட்டமிட்டிருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கியுள்ளான்.
அண்மையில் கேரளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சயனைடு வைத்து கொன்ற ஜோலி என்ற பெண்ணின் அதிர்ச்சிகரமான கொலை வழக்கையே பின்னுக்குத் தள்ளும் வகையில் ஆந்திர சயனைடு படுகொலைகள் அம்பலமாகியுள்ளன.
38 வயதான சிவா பணம் இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி மந்திர பூஜைகள் செய்வதும் பணம் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களை தனியிடத்திற்கு அழைத்துச் சென்று பிரசாதத்தில் சயனைடு கலந்து கொன்று புதைத்துவிடுவதும் வழக்கம்.
இரட்டைத் தலை பாம்பு போன்றவை வைத்து மக்களை மிரட்டி வந்ததுடன் நீரிழவு நோயைப் போக்குவது போன்ற சித்து வேலைகளையும் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்