அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான பெண்ணொருவர், 15 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, அச்சிறுவன் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரைச் சேர்ந்த ஸ்பிரிங் டேர்னர் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண் 15 வயதான சிறுவனை சுமார் 20 தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் எனவும், 2 அல்லது 3 வருட கால இடைவெளியில் இக்குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகவும் ஒர்லாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சிறுவன் மூலம் கர்ப்பமான ஸ்பிரிங் டேர்னர் இரட்டைக்குழந்தைகளை பிரசவித்தார். இறுதியாக 2018 ஜூலை 4 ஆம் திகதி தன்னை அப்பெண் பாலியல் துஷ்பிரயோகப்படுத்தினார் என பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளான்.
ஸ்பிரிங் டேர்னரின் சகோதரரின் வீட்டிலிருந்து தன்னை வெளியேற்றிவிடப் போவதாகவும் தன்னை வேலையிலிருந்து விலக்கப் போவதாகவும் அச்சுறுத்தியே அச்சிறுவனை ஸ்பிரிங் டேர்னர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் எனவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
குறித்த சிறுவனுக்கு 17 வயதான பின்னரே அவனுடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஸ்பிரிங் டேர்னர் தெரிவித்தார்.
ஆனால், புளோரிடா மாநிலத்தில் சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடக்கூடிய ஆகக் குறைந்த வயது 18 ஆகும். இதனால் சிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டை ஸ்பிரிங் டேர்னர் எதிர்கொண்டுள்ளார்.
புளோரிடா மாநில சட்டங்களின்படி இக்குற்றத்துக்கு அபராதம் மற் றும் 30 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.