தீபாவளி விருந்திற்கு அழைக்கப்பட்ட நண்பர்கள்: நண்பனைக்கொன்று மனைவியை விருந்தாக்கிய சோகம்
31 Oct,2019
மத்திய பிரதேச மாநிலத்தில் கற்பழிப்பை தடுத்ததால் நண்பர்களால் கொலையுண்ட கணவரின் உடலுடன் 170 கி.மீட்டர் வரை மனைவி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டம் ஆலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்) இவர் தீபாவளியையொட்டி தனது நண்பர்கள் அனில் குஷ்வஹா, மனோஜ் அஹிர்வார் ஆகியோரை தனது வீட்டுக்கு மது விருந்துக்கு அழைத்தார்.
அங்கு அவர்கள் மது அருந்தினர். அப்போது சுனில்குஷ்வஹா, மனோஜ் அஹிர்வார் மதுபோதையில் ராஜேஷின் மனைவியிடம் சில்மிஷம் செய்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு பின்புறம் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கற்பழிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் தனது மனைவியை கற்பழிப்பு முயற்சியில் இருந்து காப்பாற்ற போராடினார்.
இதனால் அவரை சுனில்குஷ்வஹா, மனோஜ் சரமாரியாக தாக்கினர். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது மனைவியை இருவரும் கற்பழித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேஷ் உடலையும், கற்பழிப்பில் படுகாயம் அடைந்த மனைவியையும் மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
லதேரி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்ற போது அங்கு டாக்டர்கள் இல்லை. இதையடுத்து அங்கிருந்து 34 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் டாக்டர்கள் இல்லை. பின்னர் அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிரோன்ஜியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்களுக்காக 2 மணி நேரம் காத்திருந்தனர். அப்போது லதேரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனால் மீண்டும் லதேரி ஆஸ்பத்திரிக்கு ராஜேஷ் உடலையும், அவரது மனைவியையும் கொண்டு சென்றனர். அங்கு ராஜேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் ராஜேசின் மனைவியை சிகிச்கைக்காக லதேரியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் பசோடா பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கணவர் உடலுடன் சுமார் 170 கிலோ மீட்டர் தூரம் கற்பழிக்கப்பட்ட பெண் அலைந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் முறையாக டாக்டர்கள் இல்லாததால் அப்பெண்ணுக்கு தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுனில்குஷ்வஹா, மனோஜ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.