3 பிள்ளைகளோடு பஹடியின் இறுதி நேரங்கள்ஸ சுரங்கத்தை ஏற்கனவே மூடி பொறிவைத்த அமெரிக்கா..
29 Oct,2019
சிரியாவில் உள்ள குக்கிராமம் ஒன்றில், நேற்று முன் தினம் இரவு மெதுவாக சில வெடி சத்தங்கள் கேட்க்க ஆரம்பித்தது. சைலன்சர் பூட்டிய குறி சுடும் துப்பாகி என்பதனால் அருகே இருக்கும் எவருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் பின்லேடன் ரேஞ்சுக்கு பேசப்பட்டு வரும் ஐ.எஸ் ஜிகாடிகளின் தலைவர்களில் மிக மிக முக்கியமான நபர் என்று கருதப்படும், அபு பகார் அல் பஹாடி அந்த வீட்டில் தான் தனது 3 பிள்ளைகளோடு மறைந்திருந்துள்ளார்.
பாதுகாப்பிற்காக அவரது மெய்பாதுகாப்பாளர்கள் பலர், அங்கே அந்த வீட்டை சுற்றி இருந்துள்ளார்கள். அமெரிக்க சீல் படைகள் பின்லேடனை போட்டு தள்ளிய அதே பாணியில், அங்கே நுளைந்து. மெதுவாக வெளியே இருந்த காவலர்கள் அனைவரையும் போட்டுத் தள்ளி. பின்னர் வீட்டிற்குள் நுளைந்துள்ளார்கள். மேல் மாடியில் நின்ற காவலர் ஒருவர் அமெரிக்க படைகளை கண்டதும். ஏகே- 47 ரக துப்பாக்கியால் சுட்டதும் தான். தனது வீட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதை. அல் பஹாடி உணர்ந்துகொண்டார்.
வீடு சுற்றிவளைக்கப்பட்டால், அங்கிருந்து சுரங்கம் வழியாகச் சென்று, வேறு ஒரு இடத்தில் தப்பிக்க கூடியதாகவே அவரது வீடு அமைக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அந்த சுரங்கத்தை அன்றைய தினம் இரவே கண்டு பிடித்து. அதன் வாயிலை அமெரிக்க படைகள் அடைத்துவிட்டார்கள். இந்த விடையம் தெரியாத அல் பஹாடி , தனது 3 பிள்ளைகளையும் கொண்டு அந்த சுரங்கம் வழியாகச் சென்று சடுதியாக உணர்ந்துள்ளார், தாம் மாட்டிக்கொண்டு விட்டோம் என்றும். இது ஒரு அமெரிக்க பொறி என்றும்.
உடனே தனது வெடி குண்டு ஜாக்கெட்டை இழுத்து, அந்த இடத்திலேயே அவர்கள் 4ல்வரும் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் ஏன் வம்பு. அந்த இடத்தையே அழித்து விடுவோம் என்று. அமெரிக்க படையினர் ஏரியாவையே குண்டு வைத்து தகர்த்துவிட்டார்கள். எந்த ஒரு உயிரிழப்பும் இன்றி, அமெரிக்க படையினர் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க. தொடக்கம் முதல் இறுதிவரை தாக்குதலை TV கேம்ஸ் பார்பது போல டொனால் ரம் பாத்துக் கொண்டு இருந்துள்ளாராம். இதற்காக அமெரிக்க சாட்டலைட் ஒன்று, ஒன்ரர் நெட் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிரிய மண்ணிற்கு மேலே இருந்து. இது தான் நவீன போர் யுக்த்தி