கண்டேனர் லாரி கொலை: 39 பேரிடமும் தலா 25,000 பவுண்டுகள் வாங்கிய நபர்
28 Oct,2019
சமீபத்தில் கண்டேனர் லாரியில் 39 பேர் இறந்த விடையம் யாவரும் அறிந்ததே. அதில் பெரும்பாலானவர்கள் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட போதிலும். அதில் பல வியட்நாம் நாட்டவர்களும் இருந்துள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சில செல்வந்தரது பிள்ளைகளும் உறவினர்களும் அடங்குகிறார்கள். இவர்கள் தலா 25,000 பவுண்டுகளை ஏஜன்சியிடம் கட்டியே தமது பிள்ளைகளை லண்டன் செல்ல அனுப்பியுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு லண்டனுக்கு ஆட்களை கடத்தும் முக்கிய அயர்லாந்து கோஷ்டி ஒன்றை பொலிசார் தற்போது மடக்கிப் பிடித்துள்ளதோடு.
அவர்களுக்கு செந்தமான விலையுயர்ந்த 3 கார்களையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளார்கள் . ஒவ்வொரு தடவையும் 30 தொடக்கம் 40 பேரை இவர்கள் இவ்வாறு பிரித்தானியாவுக்குள் கொண்டுவருவதன் மூலம் இவர்கள் மில்லியன் கணக்கான பவுண்டுகளை சம்பாதித்துள்ளதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.