ட்ரோன்களின் விற்பனையை ஜோன் லூவிஸ் நிறுவனம் நிறுத்தியது
17 Oct,2019
பொதுமக்களால் ட்ரோன்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதனால் அவற்றின் விற்பனையை கடந்த மே மாதத்தில் இருந்து ஜோன் லூவிஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கற்விக் விமான நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் இடையூறு ஏற்படுத்தப்பட்டதனால் அவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்தது.
நாடு முழுவதுமுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இந்தச் சாதனங்களை பறக்கவிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதனால் ட்ரோன்களின் விற்பனை சரிவுக்குள்ளானது.
ட்ரோன்களின் விற்பனை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தாம் இந்த முடிவை எடுத்ததாக பிரித்தானியாவின் மிகப்பெரிய பல்பொருள் விற்பனை நிறுவனமான ஜோன் லூவிஸின் தொழில்நுட்பப் பணிப்பாளர் லோரன்ஸ் மிச்செல் தெரிவித்துள்ளார்.
கற்விக் விமான நிலையத்தில் ட்ரோன்களின் இடையூறு காரணமாக 36 மணிநேரத்தில் சுமார் 1,000 விமான சேவைகள் ரத்துச்செய்யப்பட்டன. பல விமானங்கள் தரையிறங்காமல் திருப்பிவிடப்பட்டன.
மேலும் ட்ரோன்களின் இடையூறு காரணமாக ஹீத்ரோ உள்ளிட்ட பல விமான நிலையங்கள் விமான சேவைகளை நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தன.