பாலியல் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்ற நபர் சிறையில் குத்திக் கொல்லப்பட்டார்
14 Oct,2019
குழந்தைகள், சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் குற்றங்களுக்காக 2016 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற நபர் சிறையில் குத்திக் கொல்லப்பட்டார்.
கென்ற், ஆஷ்பேர்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹக்கிள் என்ற நபர் கிழக்கு யோர்க்ஷயரில் உள்ள ஃபுல் சற்ரன்(Full Sutton) சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 அளவில் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ரிச்சர்ட் ஹக்கிள் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
2006 முதல் 2014 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆறு மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ரிச்சர்ட் ஹக்கிள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் 71 குற்றச்சாட்டுகளை குற்றவாளி ஒப்புக்கொண்ட பின்னர் 2016 ஆம் ஆண்டில் அவருக்கு 22 வருட ஆயுள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
ஒளிப்படக் கலைஞரான ரிச்சர்ட் ஹக்கிள் 18 அல்லது 19 வயதாக இருந்தபோது முதன்முதலாக மலேசியாவுக்குச் சென்றார். அங்கு அவர் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாலிய துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
ரிச்சர்ட் ஹக்கிள் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் ஹம்பர்சைட் பொலிஸார், இந்த மரணத்தை சந்தேகத்திற்குரியது என்று கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.