வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் பெண் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்!
24 Sep,2019
வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் பெண் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்!
கனடாவில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தநிலையில் பட்டப்பகலில் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணை கொலை செய்யவுள்ளதாக அவரது முன்னாள் கணவன் முன்னரே அச்சுறுத்தல் விடுத்ததாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல கனேடிய பத்திரிகை ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தர்ஷிகாவை கொலை செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரேயே , அவரது முன்னாள் கணவன் சசிகரன், தர்ஷிகாவின் சகோதரனிடம் அவரை கொல்லப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர் அச்சுறுத்தல் விடுத்து இரண்டு வாரங்கள் கழித்து அலுவலகம் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த தர்ஷிகா, பேருந்து நிலையத்திலிருந்து Meadowvale சாலையிலுள்ள தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, அவரை கொலை செய்வதற்காக வழியில் காத்திருந்துள்ளார் சசிகரன்.
பின்னர் தர்ஷிகாவை துரத்தி கத்தியால் வெட்டிய சசிகரன், அவரது தலை முதல் கால் வரை பல இடங்களில் மிருகத்தனமாக வெட்டியிருக்கிறார்.
தர்ஷிகா வெட்டப்பட்டு உயிரிழந்து தரையில் விழுந்து கிடந்த நிலையிலும் தொடர்ந்து அவர் ஆவேசமாக வெட்டியதாக அந்த கனேடிய பத்திரிகை தெரிவித்துள்ளது.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய சசிகரன், இரத்தம் தோய்ந்த உடையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடையும்போதும் கடுமையான போதையிலிருந்ததாகவும், தன்னை கைது செய்ய முயன்ற பொலிசார் ஒருவரை குத்த முயன்றதாகவும் அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.