இத்தாலிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்ட 90 குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்ல மால்டா இணக்கம்
19 Sep,2019
இத்தாலிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்ட 90 குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்ல மால்டா ஒப்புக்கொண்டுள்ளது.
மால்டிய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் இத்தாலிய கடலோர காவற்படை, குறித்த குடியேற்றவாசிகளை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே இரவில் மீட்டுள்ளது.
மீட்கப்பட்ட நபர்களை மாற்றுவதற்காக ரோந்து படகுகளை அனுப்புமாறு இத்தாலிய கடலோர காவற்படை மால்டாவிடம் கேட்டது, ஆனால் அதனை அந்நாட்டு அரசாங்கம் மறுத்துவிட்டது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியேற்றவாசிகளை பாதுகாப்பான துறைமுகத்திற்கு அதாவது லம்பேடுசா தீவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மால்டா பலமுறை வலியுறுத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மத்திய தரைக்கடல் வழியே இயக்கப்படும் ஓஷன் வைக்கிங் தொண்டு கப்பல் ஒன்று லிபிய கடற்கரையிலிருந்து இருந்து மரப் படகில் வந்த 48 புலம்பெயர்ந்தோரை மீட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
அத்தோடு குடியேற்றவாசிகள் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் அடுத்த வாரம் மால்டாவில் கூடி விவாதிக்க உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது