6,200 வாகனங்கள் திருட்டு: பொலிஸார் அதிர்ச்சி தகவல்
14 Sep,2019
கல்கரியில் கடந்த ஆண்டு மட்டும் 6,200 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக, கல்கரியின் பொலிஸ்மா தலைவர் மார்க் நியூஃபெல்ட் தெரிவித்துள்ளார்.
இது கவலைக்குரிய விடயமென தெரிவித்துள்ள மார்க் நியூஃபெல்ட், இது நாடு முழுவதுடன் ஒப்பிடுகையில் கல்கரியிலேயே அதிக வாகனங்கள் திருடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வாகன திருட்டுக்கு போதைப்பொருள் பாவனை உந்து சக்தியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வாகனங்களைத் திருடுவதற்காக தற்போது குற்றவாளிகள் இரண்டு விடயங்களை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, கார் செல்லும் வழியில் யாரையாவது தாக்கி சாவியை எடுத்துக்கொள்வது, மற்றது இரவு வேளைகளில் வீடுகளில் புகுந்து சாவிகளை திருடுவது போன்ற சம்பவங்களில் குறித்த வாகன திருடர்கள் ஈடுபடுவதாக மார்க் நியூஃபெல்ட் தெரிவித்துள்ளார்.