கடற்கரை மணலை எடுத்த தம்பதிகள் ஆறு ஆண்டுகள் சிறை செல்ல வாய்ப்பு
22 Aug,2019
பிரான்சில் கடற்கரை மணலை எடுத்துச் சென்ற தம்பதியினர் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இவர்கள் சண்டினியான் கடற்கரையில் இருந்து 40 கிலோகிராம் மணலை எடுத்துச் சென்றபோதே பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளனர்.
இது ஒரு குற்றச்செயல் என்று தெரியாமல் ஞாபகார்த்தமாக மணலை எடுத்ததாக அந்தத் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். சார்டினியாவின் புகழ்பெற்ற வெள்ளை மணல் ஒரு பொதுச் சொத்தாக கருதப்படுவதோடு அதனை அந்தத் தீவில் இருந்து அகற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கை வளத்தை திருடுவதாக ஊர்மக்கள் பல ஆண்டுகளாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த தம்பதியினர் திருட்டுக் குற்றத்திற்காக ஓர் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தெற்கு சண்டினியாவின் சியா கடற்கரையில் இருந்து 14 பிளாஸ்டிக் போத்தல்களில் மணலை எடுத்துச் செல்லும்போதே இந்த தம்பதி பொலிஸாரிடம் பிடிபட்டனர்.
இந்த தீவில் பெறுமதி மிக்க மணலின் பல தொன் அளவு ஒவ்வொரு ஆண்டும் காணாமல்போவது குறித்து அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஐரோப்பாவை பிரதானமாகக் கொண்ட சுற்றுலா பயணிகள் போத்தல்களில் மணலை நிரப்பி அதனை இணையதளத்தின் மூலம் விற்பனை செய்கின்றனர்