தாயால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!
01 Aug,2019
திருச்சி அருகே, நாடகம் பார்க்கும் ஆசையில் 7 வயது சிறுமியை வீட்டு வாசலில் படுக்கவைத்துவிட்டு சென்ற தாயின் பொறுப்பற்ற செயலால், அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர், தனது 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அந்தச் சிறுமியின் தாய், உறங்கிக் கொண்டிருந்த தனது மகளை வீட்டு வாசலில் படுக்க வைத்து விட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சிறுமி அழுதவாறே நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.
சிறுமியின் உடைகளில் ரத்தம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தத் தாய், தனது மகளை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரிவித்தனர்.
சிறுமி பலாத்காரம் தொடர்பாக, சோதனை செய்த மருத்துவர்கள் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியைச் சீரழித்த காமுகனை போலீசார் தேடி வருகின்றனர். பெற்ற குழந்தைகளை விட சினிமா, நாடகம் மோகத்தில் பித்துப் பிடித்து தாய்மார்களுக்கு இந்த சம்பவம் ஒரு மோசமான முன்னுதாரனம்.