சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி – தப்பிக்க முயன்ற போது காயம் ஏற்பட்டு உயிரிழப்பு!
30 Jul,2019
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே 15 வயது சிறுமியை இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, தலையில் உள் காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞன், கடந்த 21ஆம் தேதி பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது தப்பிக்க முயன்ற நேரத்தில் சுவற்றில் சிறுமியின் முன்புறத் தலை மோதியதில் உள் காயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் கழித்து பெற்றோரிடம் தெரிவித்த பிறகு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சிறுமி உயிரிழந்த காரணத்தால் போக்சோ வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.