நெத்தலி கருவாடு பிரட்டல்.
27 Jul,2019
அரை இறாத்தல் நெத்தலி ( தலையில்லாதது)
பெரிய வெண்காயம் 3.
தக்காளி 1
தேவையான உப்பு
கொஞ்சம் இஞ்சி
சிறிது உள்ளி.
தேசிக்காய் 1
3 கரண்டி மிளகாய்த் தூள்.
செய்முறை:-
ஓரளவு சுடுநீரில் நெத்தலியை 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.அந்த இடைவெளியில் 3 பெரிய வெண்காயத்தையும் அரிந்து இரும்பு சட்டி அல்லது ஒட்டாத சட்டியில் போட்டு அரைவாசி வேகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளி சிறிதாக வெட்டி உள்ளி இஞ்சி கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும்.
ஊறப்போட்ட நெத்தலியை 3-4 தடவை கழுவி எடுத்து அதையும் சட்டியில் போட்டு வதக்கவும்.இதற்கு தண்ணீர் இல்லாதபடியால் கொஞ்சம் கூடுதல் எண்ணெய் தேவைப்படும்.ஒட்டாத சட்டி என்றால் நிறைய எண்ணெய் தேவைப்படாது.ஒரேயடியாக எண்ணெயை விடாமல் வத்தவத்த தேவைக்கேற்ப விடவும்.தூள் உப்பையும் தேவைக்கேற்க போடவும்.அடிப்பிடிக்காமல் அடிக்கடி பிரட்டவும்.
தூள் அவிந்த பின் சுவையைப் பார்த்து இறக்கி ஆறிய பின்னர் 1 தேசிக்காய் விடவும்.
பச்சை மிளகாய் வெண்காயத்தோடு சேர்த்து வதக்கலாம்.
சோறு புட்டு இடியப்பம் பாண் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்