13 வயதான மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை
16 Jul,2019
13 வயதான தனது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியையான யுவதியொருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த பிரிட்டனி ஸிமோரா எனும் 20 வயதான யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.பிரிட்டனி ஸிமோரா அரிஸோனா மாநிலத்தின் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர்.
இதன்போது தனது மாணவர்களில் ஒருவனான 13 வயது சிறுவனுடன் பல தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
திருமணமான பிரிட்டனி ஸிமோராவுக்கும் தமது மகனுக்கும் இடையில் தகாத தொடர்பு இருப்பதை மேற்படி மாணவனின் தொலைபேசியை ஆராய்ந்ததன் மூலம் அவனின் பெற்றோர் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் கடந்த வருடம் மார்ச் மாதம் பிரிட்டனி ஸிமோராவை கைது செய்தனர்.அதன் பின் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரிட்டனி ஸிமோரா ஒப்புக்கொண்டதுடன், தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.