கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை தம்பதி கைது!
14 Jul,2019
வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற தம்பதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருணாகலை, கிரிஉல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான தம்பதியே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள் என சுங்க பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் நேற்று இரவு 7.40 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேடஸ் விமான சேவையின் EK-652 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பயண பொதியில் சிகரெட் தொகையை மறைந்து கொண்டு வந்த நிலையில் சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 3230000 ரூபாவாகும்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் தம்பதியருக்கு எதிராக 75000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் தங்கள் பிரதேசத்தில் சிறிய வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி செல்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.