பேஸ்புக் களியாட்ட விருந்து! சிக்கிய இளைஞர் யுவதிகள்
14 Jul,2019
மாத்தறை, மிரிஸ்ஸ பிரதேசத்தில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் படகு ஒன்றில் இந்த பேஸ்புக் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொலிஸார் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்துள்ளனர்.
போதைப்பொருளுடன் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 யுவதிகளும் அடங்குகின்றனர். 19 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.