இலங்கை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
25 Jun,2019
இலங்கை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் போது புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய விசா வழங்கும் நடவடிக்கையில் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல் திணைக்களம் இந்த தீர்மானித்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தாக்குதலின் பின்னர் குடிவரவு குடியகல்வு புலனாய்வு அதிகாரிகளை ஈடுபடுத்தி விசாரணை மேற்கொண்டதில் விசா இன்றி வெளிநாட்டவர்கள் 8000 பேர் இலங்கையில் இருப்பதாக தெரியவந்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு விசா இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டவர்களையும் கைது செய்து மிரிஹான முகாமிற்கு அழைத்து வந்த பின்னர் நாடு கடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.