​அமெரிக்கா ஈரானை !!

21 Jun,2019
 


 
ஓமான் வளை­குடா. உலகம் முழு­வதும் எரி­பொ­ருளை விநி­யோ­கிக்கும் கடற்­பாதை. அங்­குள்ள குறு­க­லான நீரிணை. இரு கப்­பல்­களில் திடீ­ரென வெடிப்புச் சத்தம். சற்று நேரத்தில் கப்­பல்கள் தீப்­பற்றி எரி­கின்­றன.
ஒரு கப்­பலில் 75,000 தொன் எரி­பொருள். மற்­றைய கப்­பலில் 25,000 தொன் எரி­பொருள். கடற்­க­லங்கள் தீப்­பற்றி எரியத் தொடங்­கி­யதும் மாலு­மிகள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். ஒரு கப்பல் கைவி­டப்­ப­டு­கி­றது.
கடந்த வியா­ழ­னன்று இடம்­பெற்ற சம்­பவம். இது தனி­யொரு சம்­பவம் அல்ல. கடந்த மே மாதம் 12ஆம் திகதி நிகழ்ந்த சம்­ப­வங்­களின் தொடர்ச்சி.
அன்­றைய தினம் நான்கு கப்­பல்களில் வெடிப்புச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இந்தச் சம்­ப­வங்­களால் கப்­பல்கள் பெரும் சேதம் அடைந்­தி­ருந்­தன.
இந்தச் சம்­ப­வங்கள் மத்­திய கிழக்கின் பாது­காப்பு பற்றி கரி­ச­னை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இரா­ணுவ மோதல்கள் குறித்த அச்­சத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.
இதற்குக் காரணம் உண்டு. பிந்­திய தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானே காரணம் என்று அமெ­ரிக்கா சாடு­வதும், அதனை ஈரான் மறுப்­பதும் முதன்மைக் காரணம்.
கப்­பல்கள் தாக்­கப்­பட்­டி­ருந்தால், தாக்­கி­யது யார் என்­பதை ஆராய வேண்டும். தீர்க்­க­மான ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் தாக்­கி­ய­வரை நிரூ­பிக்க வேண்டும்.
மாறாக, ஈரானே கப்­பல்­களை நாச­மாக்­கி­யது என்­பதை புல­னாய்வுத் தக­வல்கள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக அமெ­ரிக்க வெளி­வி­வ­கார அமைச்சர் மைக் பொம்­பியோ செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­யி­ருக்­கிறார்.
இதற்குப் பதில் அளித்த ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜவாட் ஸரீப், அமெ­ரிக்­காவின் கற்­ப­னைக்கு அமைய சந்­தேகம் கூட எழ மாட்­டா­தெனத் தெரி­வித்­துள்ளார்.
இந்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும், பதி­ல­ளிப்­பு­க­ளுக்கும் கார­ண­மாக சம்­ப­வங்கள் இரு விட­யங்­களின் அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.
உலகம் முழு­வ­தற்­கு­மான எரி­பொருள் விநி­யோகம் என்­பது முதல் விடயம். ஈரான் மீது அமெ­ரிக்கா கொண்­டுள்ள பகைமை என்­பது இரண்­டா­வது விடயம்.
பார­சீக வளை­குடா என்­பது உலகில் ஆகக்­கூ­டு­த­லான எரி­பொ­ருட்கள் கப்­பலில் ஏற்றிச் செல்­லப்­படும் கடற்­பா­தை­யொன்­றிற்கு அருகில் உள்­ள­தாகும்.
இந்தக் கடற்­பா­தை­யா­னது அர­சியல் அடிப்­ப­டையில் மத்­திய கிழக்கை இரண்­டாக பிள­வு­ப­டுத்தும் கோடா­கவும் திகழ்­கி­றது.
ஒரு­பு­றத்தில் ஈரான் இருக்­கி­றது. மறு­பு­றத்தில் அமெ­ரிக்­காவின் ஆத­ரவைப் பெற்ற சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் முத­லான நாடுகள் காணப்ப­டு­கின்­றன.
இரு தரப்­புக்­களும் தமக்கு சார்­பான படை­களைப் பயன்­ப­டுத்தி, லெபனான், ஈராக், சிரியா, பஹ்ரேன் முத­லான நாடு­களில் பல வருடங்களாக சண்­டை­யிட்டு வரு­கின்­றன.
யேமனில் ஈரா­னுக்கு சார்­பான குழு­வொன்றை தோற்­க­டிப்­ப­தற்­காக சவூதி அரே­பியப் படை­களும், எமிரேட்ஸ் படை­களும் நான்­காண்­டு­க­ளாக நேர­டி­யாக களத்தில் போரி­டு­கின்­றன.
இந்த சண்­டைக்கு மத்­தியில், மத்­திய கிழக்கில் ஆதிக்­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்­காக அமெ­ரிக்­காவும் படை­களைக் குவித்­தி­ருக்­கி­றது.
எனவே, வேறு நாடு­க­ளது கொடிகள் பறக்கும் கப்­பல்­களை ஈரானே தாக்­கி­ய­தாக அமெ­ரிக்கா மேலோட்­ட­மாகக் கூறு­வதன் தாற்­பரி­யத்தை ஆராய வேண்டும்.
மத்­திய கிழக்கில் ஆதிக்­கத்தை நிலை­நாட்­டுதல் என்­பது அமெ­ரிக்­காவின் அவா. அதற்­காக ஈரானை ஓரங்­கட்­டுதல் என்ற மூலோ­பா­யத்தை அமெ­ரிக்கா அனு­ச­ரிக்­கி­றது.
அமெ­ரிக்­காவின் மத்­திய கிழக்குக் கொள்­கைகள் சகல விதங்­க­ளிலும் தோல்வி கண்­டுள்­ளன. இந்தத் தோல்­வியை பல வடி­வங்­களில் வெளிப்­ப­டை­யாகக் காணலாம்.
இஸ்­ரே­லிய பலஸ்­தீனப் பிரச்சி னையில் தீர்வு என்­பது எட்­டாக்­கனி. இன்று இஸ்­ரேலில் வலு­வான அர­சாங்­கத்தை அமைப்­பது கூட சாத்­தி­ய­மில்­லாமல் இருக்­கி­றது.
சிரி­யாவில் சிவில் யுத்தம். யேமனில் பெரும் மனிதப் பேர­வலம். ஈராக்கில் குழுக்­க­ளுக்கு இடை­யி­லான சண்டை. பிராந்­தியம் முழு­வதும் ஐ.எஸ். முத­லான இயக்­கங்­களின் ஆதிக்கம்.
இத்­த­கைய சூழ்­நி­லையில், ஈரானை வம்­புக்கு இழுத்து, அதனை ஓரங்­கட்­டு­வதன் மூலம், தாம் வெற்றி பெற்றோம் என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வது அமெ­ரிக்­காவின் மூலோ­பா­ய­மாகக் காணப்­ப­டு­கி­றது.
இந்த நடை­மு­றையில், ஈரா­னிய அர­சாங்­கத்தை எப்­ப­டி­யா­வது ஆட்சி­பீ­டத்தில் இருந்து கவிழ்த்து விட வேண்டும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி திட்டம் போட்டார்.
இது மூன்று அம்­சங்­களைக் கொண்­டது. ஈரா­னு­ட­னான அணு உடன்­ப­டிக்­கையில் இருந்து வில­குதல், பொரு­ளா­தாரத் தடை­களை விதித்தல், ஈரா­னுக்கு எதி­ரான கூட்­ட­ணியை உரு­வாக்­குதல்.
அணு உடன்­ப­டிக்கை முக்­கி­ய­மா­னது. இதில் அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜேர்­மனி ஆகிய நாடு­களும் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன.
இதன் கீழ், ஈரான் சர்ச்­சைக்­கு­ரிய அணு உற்­பத்தி செயற்­பா­டு­களை நிறுத்த வேண்டும். பதி­லுக்கு உலக நாடுகள் ஈரான் மீதான தடை­களை நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சியம்.
இந்த உடன்­ப­டிக்­கையில் இருந்து வில­கு­வ­தாக கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அறி­வித்தார். இதற்­கான கார­ணத்­தையும் அறி­வித்தார்.
அணு­வா­யு­தங்கள் என்ற அச்­சு­றுத்­த­லுக்கு அடி­ப­ணிந்து அமெ­ரிக்­காவை எவரும் பணயக் கைதி­யாக்க முடி­யாது என்­பது ட்ரம்பின் விளக்­க­மாக இருந்­தது.
உலக வல்­ல­ர­சுகள் ஒன்­று­கூடி உரு­வாக்­கிய உடன்­ப­டிக்கை. அதிலிருந்து வில­கு­வ­தற்கு அமெரிக்க ஜனா­தி­ப­தியால் தர்க்க ரீதி­யான கார­ண­மொன்றைக் கூற முடி­ய­வில்லை.
இதன்­மூலம், சர்­வ­தேச அரங்கில் ஈரானைத் தனி­மைப்­ப­டுத்­து­வது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் நோக்கம். தனி­மைப்­ப­டுத்­தினால் ஈரா­னுக்கு பொரு­ளா­தார கஷ்டம் ஏற்­படும். ஆட்­சியைக் கவிழ்க்­க­லா­மென அவர் கணக்குப் போட்­டி­ருக்­கலாம்.
ஆனால், அவ­ரது கணக்கு தப்புக் கணக்­கா­கி­யது. அணு உடன்­ப­டிக்­கையில் இருந்து அமெ­ரிக்கா வில­கி­யதால் ஈரான் அஞ்­ச­வில்லை. உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்ட நாடுகள் அதனைக் கைவிட விரும்­ப­வில்லை.
அணு உடன்­ப­டிக்­கையைக் குறைத்து மதிப்­பிட வேண்­டா­மென ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் கோரின. ஈரா­னுடன் பிரச்­சினை இருந்தால், அதனை அமை­தி­யான முறையில் தீர்த்துக் கொள்­ளு­மாறு கோரின. இவற்றில் நான்கு நாடுகள் பாது­காப்புச் சபையில் நிரந்­தர அங்­கத்­த­வர்கள்.
மறு­பு­றத்தில், அணு உடன்­ப­டிக்­கையை மதித்தன் மூலம் சர்­வ­தேச கடப்­பா­டுகள் மீதான விசு­வா­சத்தை ஈரான் வெளிப்­ப­டுத்­தி­யது. உடன்­ப­டிக்­கையின் நிபந்­த­னை­களை நிறை­வேற்றி, அதிலிருந்து வில­காமல் இருப்­பதை உறுதி செய்­வ­திலும் வெற்றி பெற்­றது.
ஈரான் மீது அமெ­ரிக்கா விதித்த கடு­மை­யான பொரு­ளா­தாரத் தடை­களால், ஈரா­னிய பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­டது. இருந்­த­போ­திலும், ஏனைய நாடுகள் தொடர்ந்து ஈரா­னுடன் வர்த்­தகம் செய்­தன. ஈரானின் எரி­பொ­ருளை காசு கொடுத்து வாங்­கின.
ஈரா­னுக்கு எதி­ரான கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்­து­வது அமெ­ரிக்­கா­விற்கு சிர­ம­மா­ன­தாக இருக்­க­வில்லை. ஈரா­னிய மக்கள் பெரும்­பாலும் ஷியா கோட்­பா­டு­களை அனு­ச­ரிப்­ப­வர்கள்.
சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் முத­லான நாடு­களின் எதேச்­சா­தி­கார அதி­கா­ரிகள் சுன்­னத்துல் ஜமாஅத் பிரி­வினர்.
சவூதி, எமிரேட்ஸ் கூட்­ட­ணி­யுடன் இஸ்­லா­மிய நாடு­களின் ஸ்தாப­னத்தை இணைத்து ஈரா­னுக்கு எதி­ராக திருப்ப முனைந்தார், ட்ரம்ப். இஸ்­ரேலின் தீவிர வல­து­சாரி அர­சாங்­கத்­தையும் இணைத்துக் கொள்ளும் வகையில் காய்­களை நகர்த்­தினார்.
இந்த நகர்­வு­களால் ஈரா­னிய மக்­களை அச்­சு­றுத்த முடி­ய­வில்லை. மாறாக, இறை­மை­யுள்ள பார­சீக தேசத்­த­வர்­க­ளாக ஈரா­னிய மக்கள் ஒன்­று­பட்­டார்கள். அயல்­நா­டு­களில் இருந்து விடுக்­கப்­படும் அச்­சு­றுத்தல் ஈரா­னிய மக்கள் மத்­தி­யி­லான பிள­வு­க­ளையும் நீக்­கி­யது எனலாம்.
பேர­ழிவு தரும் ஆயு­தங்கள் உள்­ள­தாகக் கூறிக்­கொண்டு, 2003ஆம் ஆண்டில் அமெ­ரிக்கப் படைகள் ஈராக்கை ஊடு­ரு­வி­யதன் விளை­வு­களை ஈரா­னிய மக்கள் மறந்­தி­ருக்க மாட்­டார்கள். எனவே, அந்­நிய ஆக்­கி­ர­மிப்­பிற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்ற எண்ணம் ஈரா­னி­யர்கள் மத்­தியில் மேலோங்­கி­யது.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி இன்­னொரு காரி­யத்­தையும் செய்தார். தமது மக்­க­ள­வையின் எதிர்ப்பை மீறி, சவூதி அரே­பி­யா­விற்கும், ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸிற்கும் நவீன ரக ஆயு­தங்­களை பெரு­ம­ளவில் விற்­பனை செய்தார். யேமன் யுத்­தத்தில் ஈரானை தோல்வி காணச் செய்தல் அவ­ரது தந்­தி­ரோ­பாயம்.
யேமனில், ஹவுதி கிளர்ச்சிக் குழுக்­க­ளுக்கு ஈரா­னியப் படைகள் உத­வு­கின்­றன. சவூதி, எமிரேட்ஸ் படைகள் இணைந்து நடத்தும் தாக்­கு­தலில், ஈரானின் மூக்கு உடை­பட வேண்டும். இதன்மூலம், தமது ஆதிக்­கத்தை நிலை­நாட்ட வேண்டும் என ட்ரம்ப் நினைத்தார்.
ஆனால், நடந்­தது வேறு. சவூதி, எமிரேட்ஸ் படை­க­ளுக்கு கிடைத்த ஆயு­தங்கள் மூலம் கூடு­த­லாக பொது மக்­களே கொல்­லப்­பட்­டார்கள். யேமன் போர்க்­க­ள­மாக மாறி, அங்கு பசியும் பட்­டி­னியும் தாண்­ட­வ­மாடும் நிலை தோன்­றி­யது. இதற்கு அமெ­ரிக்­காவே காரணம் என்ற எண்ணம் வலுப்­பெற்­றது.
ஈரா­னுக்கு எதி­ரான துப்­பாக்கி ராஜ­தந்­தி­ரத்தில் தமக்கு ஏற்­பட்ட தோல்­வியை அமெ­ரிக்கா ஒரு­போதும் ஏற்றுக் கொள்ள மாட்டாது. எனவே, இன்னொரு வழியில் ஈரானைத் தனிமைப்படுத்தக்கூடிய வழியைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ட்ரம்பிற்கு எழுந்திருக்கலாம்.
இந்த நிர்ப்பந்தமே கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது பழிபோடும் படலமாக மாறியிருக்கிறது. ஈரானைக் குற்றவாளியாக நிரூபித்து விட்டால், உலக அளவிலான எரிபொருள் விநியோகத்தை முடக்கிய தேசமாக முத்திரை குத்தி விடலாம் என்பது ட்ரம்பின் எண்ணம்.
இந்தக் கைங்கரியத்தைச் செய்ய வேண்டுமாயின் வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் பயனில்லை. மாறாக தகுந்த ஆதாரங்களுடன் ஈரான் குற்றவாளி என்பதை அமெரிக்க ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும்.
எப்படியென்றால், பேரழிவு தரும் ஆயுதங்கள் இருப்பதாகக் கருதி ஈராக்கிய மண்ணை ஆக்கிரமித்த பின்னர், அங்கு எந்தவொரு ஆயுதத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதை போல அதனை தொடர்ந்து உலக மக்கள் மத்தியில் தார்மிக குற்றவாளியாக நின்றதைப் போலவேனும் நிரூபிக்கலாம்.
 – S.K.பிள்ளை-



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies