8வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

21 Jun,2019
 

 

 

 
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உள்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த மே மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
எனினும் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்தே பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை மந்திகை வைத்தியசாலையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர்.
அத்துடன், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அவர் நேற்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சந்தேகநபர் நேற்று பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
எனினும் சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரால் அச்சுறுத்தல் உண்டும் எனவும் பொலிஸாரால் மன்றுரைக்கப்பட்டது.
அதனால் சந்தேகநபரின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்படைய செய்தி
யாழில் 8 வயதான மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடாத்திய காமுக ஆசிரியர்!!
யாழ் வடமராட்சி கல்வி வலயத்தில் பருத்தித்துறை கோட்ட கல்வி பிரிவில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் 12.06.2019 ம் திகதி கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 19.06.2019 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
19.06.2019 புதன்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை மீண்டும் 14 நாட்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கெளரவ மன்று உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை செல்ல மறுத்து அடம்பிடித்த மாணவியை தினமும் வலுக்கட்டாயப்படுத்தி தாயார் பாடசாலை அனுப்பி வைத்த நிலையில் 10 நாட்கள் கழிந்த பின்னரே பெற்றோருக்கு குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
இரண்டு மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற போது அதில் ஒரு மாணவியை பிடித்து வைத்து மலசல கூடத்துக்கு பின்புறமாக வைத்து மிக மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த பாடசாலையில் ஆண் பெண் கழிப்பறைகள் அருகருகே இருப்பது சந்தேக நபருக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வகுப்பாசிரிடம் சொல்லி விட்டே சிறுநீர் கழிக்க சென்ற இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி சற்று தாமதமாக வந்து அழுது கொண்டு மேசையில் படுத்ததை வகுப்பாசிரியர் அவதானித்துள்ளார். எனினும் விசேட கவனத்தை செலுத்தி இருந்தால் சம்பவம் உடனடியாக வெளிப்பட்டு இருக்கும்.
குறித்த சம்பவத்தை பெற்றோர் உடனடியாக பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலமான முறைப்பாடு செய்துள்ளனர். அதிபர் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்காது வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளருக்கு அறிவித்ததாகவும் அறிய முடிகிறது.
வலயக்கல்வி அலுவலகம் வழமை போல பொலிசாருக்கு அறிவிக்காது சம்பவத்தை மூடி மறைக்க பல முயற்சிகள் எடுத்துள்ளனர்.
பெண் மாணவிகளிற்கு நேர்ந்த கொடுமையை விசாரிக்க தமது விசாரணை குழுவில் இரண்டு ஆண் அதிகாரிகளை மட்டும் அனுப்பி விசாரணை செய்துள்ளனர்.
குறித்த நபர்களும் சாட்சியான மாணவியை பொலிஸார் போல குறுக்கு விசாரணை செய்து சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்துள்ளனர்.
07.06.2019 அறிந்த சம்பவத்தை இதுவரை பொலிசாருக்கு அறிவிக்காது சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி எடுத்து வரும் அதிபர் உப அதிபர் வலயக்கல்வி பணிப்பாளர் கோட்ட கல்வி அதிகாரி மீது பொலிஸார் தனியான வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அவர்களும் சம்பவத்தை பொலிசாருக்கு அறிவிக்காத மற்றும் சாட்சிகளை மிரட்டிய கலைத்த குற்றத்திற்காக எந் நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
மனமுடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரின் ஊடாக சம்பவத்தை அறிந்த வைத்தியசாலை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து 4 நாட்களின் பின்னர் விடயம் பெற்றோர் ஊடாக பருத்தித்துறை பொலிஸில் 10.06.2019 அன்று முறைப்பாடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் வைத்து 8 வயது சிறுமியை மிக மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெளரவ நீதிமன்றம் குறித்த வழக்கில் விசேட கவனம் செலுத்தி குற்றத்தை மறைக்க முற்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பலரும் குறித்த சம்பவத்தை கண்டிப்பதுடன் பாரதூரமான சம்பவத்தை மூடி மறைத்த கல்வி அதிகாரிகளையும் கைது செய்ய வலியுறுத்தி வருவதாக அறிய முடிகிறது.
குற்றம் செய்பவனை விட குற்றத்தை மூடி மறைக்க முற்படுவது சாட்சியங்களை கலைப்பது நீதிவான் நீதிமன்றத்தில் கூட பிணை எடுக்க முடியாத குற்றம் என்பது யாவருக்கும் தெரிந்த சட்டமே.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies