13 வயதான சிறுமி லூசிlondon (சவுத்தம்ப்டன்)நெருக்கமாகப் பழகிய இளஞனால் கொல்லப்பட்டார்
20 Jun,2019
லூசி மக்ஹியூ என்னும் 13 வயதான சிறுமி 25 வயதான இளைஞனுடன் ரகசிய உறவைப் பேணியநிலையில் அவ்விளைஞனாலேயே கொல்லப்பட்ட துயரமான சம்பவம் சவுத்தம்ப்டன் பகுதியில் இடம்பெற்றது.
பராமரிப்பு ஊழியரான ஸ்டீபன் நிக்கல்சன் (25) தான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் 13 வயது மகளுடன் ஒரு வருடமாக நெருக்கமாகப் பழகிவந்த நிலையில் அச்சிறுமியைக் கொலைசெய்துள்ளார்.
மான்செல் வீதி சவுத்தம்ப்டன் பகுதியில் உள்ள வீட்டில் தாயுடன் வசித்த லூசி மக்ஹியூ, கடந்த வருடம் ஜூலை 26 ஆம் திகதி சவுத்தம்ப்டன் விளையாட்டு மையத்தின் வனப்பகுதியில் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
2017 ஆம் ஆண்டில் இருந்து ஒருவருட காலம் ஸ்டீபன் நிக்கல்சனுடன் மிக நெருக்கமான உறவைப்பேணிய லூசி தனது ரகசிய உறவை தாயாருக்குத் தெரியாது மறைத்துள்ளார்.
சிறுமியுடனான பாலியல் உறவு மற்றும் கொடூரமாகக் கொலைசெய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஸ்டீபன் நிக்கல்சன் மீது சுமத்தப்பட்டு அவை குறித்த வழக்கு விசாரணை வின்செஸ்ரர் கிரௌன் நீதிமன்றில் நடைபெறுவருகின்றது.
சிறுமி லூசியின் கழுத்து மற்றும் உடலின் மேற்பகுதியில் கடுமையான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதாக உடற்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை ஆறு வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.