விமானத்தின் மலசலகூடத்தை விட்டு வெளியேற மறுத்த பயணியால் பரபரப்பு
05 Jun,2019
இந்தோனேசிய பாலித்தீவிலிருந்து அவுஸ்திரேலிய சிட்னி நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பயணித்த விமானமொன்றின் மலசலகூடத்திற்குள் பெண்ணொருவர் பிரவேசித்து உட்புறமாக தாளிட்டுக் கொண்டு வெளியேற மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில விமானத்திலிருந்த விமான ஊழியர்கள் மலசலகூட கதவைத் தொடர்ந்து தட்டி அந்த பெண்ணை வெளியேற வலியுறுத்திய போதும் அந்தப் பெண் மலசலகூடத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் மலசலகூடத்தில் இருக்கவே விமா னம் சிட்னி நகர விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதனையடுத்து விமானத்திலிருந்த ஆண் பணியாளர் ஒருவர் அந்த மலசலகூடத்தின் கதவை உடைத்து திறந்துள் ளார். இதனால் சினமடைந்த அந்தப் பெண் தகாத வார்த்தைக ளால் திட்டி கூச்சலிட்டு குழப்பம் விளைவித்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த பொலிஸாரால் அப்பெண் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.