ஒரே நேரத்தில் மரணத்தை தழுவிய கணவன்,மனைவி
02 Jun,2019
என்பத்தேழு வயதுகளையுடைய வயோதிபக் கணவனும் மனைவியும் மரணமாகி ஒரே தினத்தில் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பிபிலைப் பகுதியின் தியகாம்பல என்ற இடத்தில் இன்று மாலை இடம்பெறுகின்றது.தியகாம்பல என்ற இடத்தைச் சேர்ந்த வினிதா சந்திராவதி (வயது 87) என்பவரதும் அவரது கணவன் எம்.எம்.தர்மசேன (வயது 87) ஆகிய இருவரது மரணங்கள் தொடர்பாகவே இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வினிதா சந்திராவதி நோய்வாய்ப்பட்டு பிபிலை அரசினர் வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வந்தார். அச் சிகிச்சை பயணலிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பை அறிந்தவுடனேயே அவரது கணவன் மயக்கமுற்று விழுந்து வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.
இவ்விருவரும் மிகவும் அன்பாகவும்,பாசமாகவும் ஒன்றாக இருந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு மரணங்களும் 01-06-2019 மாலை பிபிலை மெதகமை மயானத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கான இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன.