மக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின்
09 May,2019
மக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
புகைப்பிடிப்பது மற்றும் மதுபானம் அருந்துதல் தொடர்பான நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நோர்வே மக்கள் எவ்வளவு வேண்டுமாயினும் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் என நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட சில்வி லிஸ்தோக், நோர்வே ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார்.
இதன்போது, தான் ஒரு இறுக்கமான பொலிஸ்அதிகாரி போன்று செயற்படப்போவதில்லை எனவும், மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புகைப்பிடிக்கவும், மதுபானம் அருந்தவும் மக்கள் அனுமதிக்கப்படவேண்டும். எது சுகாதாரமானது என்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளனர் எனத் தெரிவித்தார்