திருமணம் செய்து வைக்க கோரி குள்ள மனிதர் போலீசில் புகார்!
03 May,2019
உத்தரபிரேச மாநிலத்தை சேர்ந்த குள்ள மனிதர் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் உதவவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கைய்ரானா நகர் பகுதியை சேர்ந்தவர் அசிம் மன்சூரி 26 வயதான இவர் 2 அடி 3 அங்குலம் உள்ள குள்ள மனிதர் ஆவார். இவருக்கு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்று ஆசை. இது பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
ஆனால் அவருக்கு மணப்பெண் தேட குடும்பத்தினர் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் அசிம் மன்சூரி, போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அதில் தனக்கு தகுந்த மணமகளை தேட குடும்பத்தினர் உதவவில்லை. எனவே எனக்கு மணப்பெண் தேட போலீசார் உதவ வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் அசிம் மன்சூரி வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் பேசினர். இது தொடர்பாக அசிம் மன்சூரி கூறும் போது, போலீசார் எனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் பேசினர். 2 மாதங்களுக்குள் குடும்பத்தினர் மணப்பெண்ணை தேடவில்லை என்றால் அதன் பின் போலீசார் உதவி செய்வதாக தெரிவித்தனர் என்றார்.
இதுகுறித்து ஆசிம் மன்சூரின் தந்தை நசிம் கூறும் போது, சமீபத்தில் மீரட்டில் ஒரு மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் பேசினோம். ஆனால் அது கைகூடவில்லை என்றார்.
கடந்த ஆண்டு லக்னோவில் ஆசிம் மன்சூரி முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவை சந்தித்து தனக்கு திருமணம் செய்து வைக்க உதவ வேண்டும் என்று மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது