நண்பர்களுக்கு கிடைத்த தங்கப் புதையல்
27 Apr,2019
பாய்க்கும் மேல் மதிப்புள்ள பழங்கால நாணயங்கள்
இங்கிலாந்தில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த நாணயங்களை 4 நண்பர்கள் சேர்ந்து மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தோண்டி எடுத்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 38 வயதான ஆண்ட்ரூ வின்டர் என்பவர் தனது சகோதரர் டோபியாஸ் நோவக், மேட்டூஸ், தாரியஸ் பிஜஸ்கோவ்ஸ்கி ஆகியோருடன் பக்கிங்காம்ஷயர் பகுதியில் மொத்தமாக 550-க்கும் அதிகமான நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள், முதல், இரண்டாம் எட்வர்டு மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய 545 வெள்ளி நாணயங்களையும், மூன்றாம் எட்வர்டு மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய 12 தங்க நாணயங்களையும் கண்டு பிடித்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஆண்ட்ரூ கூறும்போது, குறிப்பிட்ட பகுதியைச் சுத்தம் செய்தபிறகு நான் என்னுடைய சகோதரருடன் சேர்ந்து மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தேன். அப்போதுதான் வெள்ளி நாணயங்களைக் கண்டுபிடித்தோம்.
உடனே தேடுதலைத் தீவிரப்படுத்தி, இந்த நாணயங்களைக் கண்டு பிடித்தோம். முதல் நாளில் 276 வெள்ளி நாயணங்களைத் தோண்டி எடுத்தோம். அடுத்த மூன்று நாட்களும் 545 வெள்ளி நாணயங்கள் மற்றும் 12 தங்க நாணயங்களைத் தோண்டி எடுத்தோம்.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பணக்காரர், பாதுகாப்புக்காக இவற்றைப் புதைத்து வைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறோம். இவை அனைத்தும் ஓர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளன. அதன் பின்னர் அவை விற்பனைக்குச் செல்லும் எனத் தெரிவித்தனர்.
இங்கிலாந்து நாணயத்தின்படி ஒன்றரை லட்சம் பவுண்டு மதிப்புள்ள இந்த நாணயங் களின் இந்திய மதிப்பு ரூ. 1.35 கோடி