துருக்கியில் காற்றில் நிழற்குடையுடன் பறந்த மனிதரின் வீடியோ
30 Mar,2019
துருக்கி நாட்டில் ஒஸ்மானியே பகுதியில் காற்று பலமாக வீசியதால், பறக்க இருந்த நிழற்குடையை தடுத்து நிறுத்த முயன்ற ஒருவர் அந்த குடையுடனே பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாதிக் கோகதள்ளி என்ற அந்த நபர் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படாமல் தரையிறங்கினார்.
இது குறித்து சாதிக் கோகதள்ளி கூறுகையில், நான் நலமாக உள்ளேன்.ஹோட்டல் வெளியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென காற்று பலமாக வீசியது. இதனையடுத்து அருகில் இருந்த நிழற்குடை பறக்க தொடங்கியது அதனை நான் கட்டுப்படுத்த முயன்ற போது காற்று அந்த குடையுடன் சேர்த்து என்னையும் மேலே இழுத்து சென்றது.
சுமார் 2 அல்லது 3 மீட்டர் உயரம் வரை பறந்தேன், காயமின்றி தப்பித்து விட்டேன். அவருடன் இருந்த ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.