6-ம் திகதி ஏப்பிரல் விமானத்தில் பறக்க வேண்டாம்- எச்சரிக்கை தமிழர்களே!
21 Mar,2019
வரும் 6ம் திகதி ஏப்பிரல் மாதம் பூமியில் உள்ள பல மில்லியன் ஜி.பி.எஸ் கருவிகள் செயலிழக்க உள்ளது. குறிப்பாக காரில் நீங்கள் பாவிக்கும் சட் நவ், உங்கள் டாம் டாம் சட் நவ் மற்றும் ஏராளமான ஜி.பி.எஸ் கருவிகள் வேலை செய்யாது என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நீங்கள் உங்கள் கருவிகளை அப் டேட் செய்ய வேண்டி இருக்கும். இது இவ்வாறு இருக்க , விமானங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விமான நிறுவனங்களும் தனது கருவிகளை சரி செய்துள்ள நிலையில்.
சிலவேளைகளில் கோளாறு ஏற்பட்டால், விமானி திசை தெரியாமல், மற்றும் பறக்கும் உயரம் தெரியாமல் திக்கி திணற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதனால் பெரும் விபத்துகள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுபோக நீங்கள் காரில் நீண்ட தூரம் பயணிக்கும் வேளை உங்கள் சாட்டலைட் நவகேஷன் செயல் இழந்தால், நீங்கள் திசை தெரியாமல் அல்லாடவேண்டி இருக்கும். எனவே 6ம் திகதி ஏப்பிரல் மாதம் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தமிழர்களே..