பொள்ளாச்சியில் பலவருடங்களாக நடந்த பாலியல் வன்முறை சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகாரினால் அம்பலமானது. \
இதன்பேரில் போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகின்றேன். என்னுடைய பள்ளி தோழி அறிமுகம் செய்ததின் மூலம் மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் திருநாவுக்கரசு, ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் மகன் சபரிராஜன் ஆகியோரை எனக்கு தெரியும்.
அவர்கள் 2 பேரும் என்னிடம் செல்போனில் பேசுவார்கள். அண்ணன் வயதில் இருப்பதால் நானும் சபரிராஜனிடமும், திருநாவுக்கரசிடமும் நட்பு ரீதியில் பேசினேன்.
இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு நான் கல்லூரியில் இருந்த போது, சபரிராஜன் எனக்கு போன் செய்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் உடனே புறப்பட்டு ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு வா என்று சொன்னான்.
நான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து பஸ் ஏறி ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு சென்றேன். அங்கு ஒரு பேக்கரி முன் சில்வர் கலர் வோக்ஸ்வேகன் காரை நிறுத்தி கொண்டு சபரிராஜனும், திருநாவுக்கரசும் இருந்தனர்.
நான் அவங்க பக்கத்தில் போனதும் சபரிராஜன் காரில் போய்கிட்டே பேசலாம் என்று சொன்னான். நானும் காரின் பின்சீட்டில் ஏறிக் கொண்டேன்.
சபரிராஜன் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். காரை திருநாவுக்கரசு ஸ்டார்ட் செய்த போது 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் திருநாவுக்கரசுக்கு இடதுபுற சீட்டிலும், இன்னொருவர் பின் சீட்டில் சபரிராஜன் பக்கத்திலும்அமர்ந்தனர்.
நான் சபரிராஜனிடம் இவங்க 2 பேரும் யார்? என்று கேட்ட போது, கடை வீதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சதீஷ் எனவும், பின் சீட்டில் இருந்தவர் பக்கோதிபாளையம் வசந்தகுமார் எனவும் சொன்னான்.
பின்னர் திருநாவுக்கரசு தாராபுரம் ரோட்டில் சிறிது தூரம் காரை ஓட்டி சென்ற போது, நான் சபரிராஜனிடம் ஏதோ பேசணும் என்று சொன்னியே என்ன பேசணும் என கேட்ட போது, திடீரென்று திருநாவுக்கரசு காரை நிறுத்தினான்.
அப்போது எனது விருப்பம் இல்லாமல் சபரிராஜன் எனது மேலாடையை கழற்றினான். நான் சுதாகரித்து தடுப்பதற்குள் முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த சதீஷ் அவனது செல்போனில், என்னை மேலாடை கழன்ற கோலத்தில் வீடியோ எடுத்து விட்டான்.
இதனால் நான் பதறிபோய் செல்போனை தட்டி விட்டு என்னடா பண்றீங்க என்று சத்தம் போட்டேன். அப்போது அவங்க 4 பேரும் சேர்ந்து, நீ மேலாடை இல்லாமல் இருப்பதை வீடியோ எடுத்து விட்டோம்.
அதனால் நீ நாங்க எப்ப கூப்பிட்டாலும் எங்க கூட வந்து எங்களுடன் சந்தோஷமாக இருக்கணும். நாங்க அவ்வப்போது கேட்கிற பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கணும்.
இதை வெளியில் சொன்னால் இப்ப எடுத்த உன் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு உன் வாழ்க்கையை சீரழித்து விடுவோம் என மிரட்டினார்கள்.
அப்போது என்னிடம் பணம் இல்லை என்று, சொன்ன போது சபரிராஜன் பணம் இல்லைன்னா என்ன கழுத்தில் போட்டு இருக்கிற நகையை கழற்றி கொடு என்று மிரட்டினான்.
நான் நகையை கொடுக்க மறுத்து கழுத்தை மறைத்த போது சபரிராஜனும், திருநாவுக்கரசும், வசந்தகுமாரும் என் இரு கைகளையும் இழுத்து பிடிக்க சதீஷ் நான் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகையை பறித்து கொண்டான்.
இதனால் மனவேதனை அடைந்த நான் கதறி அழுத போது என்னை அங்கேயே இறக்கி விட்டு விட்டு அவங்க 4 பேரும் காரை எடுத்து கொண்டு சென்று விட்டார்கள்.
நான் அழுது கொண்டு நிற்பதை பார்த்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என் அருகில் வந்து எதுக்கு அழுகிறாய் என்றனர்.
பின்னர் என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டார்கள். அதில் கல்லூரி வந்தேன். பின்னர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்றேன். இது வீட்டிற்கு தெரிந்தால் அவமானமாகி விடும் என்று நினைத்து என் வீட்டில் சொல்லாமல் இருந்தேன்.
இந்த நிலையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் அடிக்கடி என்னை நேரில் பார்த்து செலவுக்கு பணம் கொடுக்கிறாயா?இல்லை உன் ஆபாச படத்தை இணைய தளத்தில் போடவா என்று மிரட்டினார்கள்.
அதனால் நான் நடந்த உண்மைகளை எனது பெற்றோரிடம் 24-ந்தேதி சொல்லி விட்டேன். எனது அப்பாவும், அண்ணனும் புகார் கொடுக்க முடிவு செய்தனர்.
என்னை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று எனது விருப்பம் இல்லாமல் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து என்னை மிரட்டி நான் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து சென்ற திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், நகர மாணவரணி செயலாளர் ஹெரோன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஒரே கேங்காக சுற்றுவோம். எங்கள் தலைவன் பார் நாகராஜ் தான்.
அதிகமாக மாமூல் கொடுத்ததால், போலீஸ் நிலையத்தில் நாகராஜ் வைத்ததுதான் சட்டம்.
எங்களுக்கு போலீசுடன் நெருக்கம் ஏற்பட்டதால் தவறுக்கு மேல் தவறு செய்ய ஆரம்பித்தோம்.
எங்களைப்போலவே, சிவில் இன்ஜினியர் சபரிராஜனும், பெண்களை காதலித்து உல்லாசமாக இருந்து வந்தார்.
ஏராளமான பெண்களை எங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தோம்.
அதில் இருந்த வீடிேயாக்களில் இருந்த பெண்களை சபரிராஜன் மூலம் பண்ைண வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசமாக இருந்தோம்.
எங்கள் கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும், சபரிராஜன் காதலித்துள்ளார். அந்த பண்ணை அழைத்துவந்தபோது அவர் எங்களை அடையாளம் கண்டுகொண்டார். இதனால், சிக்கிக்ெகாண்டோம்.
கோவை: பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பணம் பறித்தது குறித்து சிபிசிபிஐடி போலீசில் திருநாவுக்கரசு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவி அங்குள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இவரை, தனி அறையில் அடைத்து ஆபாச வீடியோ எடுத்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (27), இவரது கூட்டாளிகளான சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் மேற்பார்வையில், ஐ.ஜி ஸ்ரீதர், எஸ்.பி. நிஷா பார்த்திபன் ஆகியோரது தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்கில் திருநாவுக்கரசு தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, இவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சிபிசிஐடி எஸ்.பி. நிஷா, கோவை சி.ேஜ.எம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி நாகராஜ் மனுவை விசாரித்தார். அப்போது, திருநாவுக்கரசை, கோவை மத்திய சிறையில் இருந்து, கோர்ட்டுக்கு அழைத்துவர போலீசார் ஏற்பாடு செய்தனர்.
ஆனால், கோர்ட்டுக்கு வெளியே வக்கீல்கள், மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து, திருநாவுக்கரசுவிடம் வீடியோகான்பரன்சிஸ் மூலம் நீதிபதி விசாரித்தார். பின்னர், திருநாவுக்கரசுவை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
விசாரணையை முடித்து வரும் 18ம்தேதி மாலை ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின், கோவை சிறையில் இருந்து நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் திருநாவுக்கரசு வெளியே அழைத்து செல்லப்பட்டான்.
சிபிசிஐடி போலீசார், திருநாவுக்கரசுவை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள ஒரு ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறியதாவது:
என்னுடைய அப்பா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். எங்களுக்கு 5 ஏக்கரில் பண்ணை உள்ளது. எனது பெற்றோர் எனக்கு செலவுக்கு அளவுக்கதிகமாக பணம் கொடுத்தனர்.
இதனால், பைக், கார் வாங்கி சுற்றி வந்தேன். அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், நகர மாணவரணி செயலாளர் ஹெரோன், சதீஷ், வசந்தக்குமார் உள்பட 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் உருவாகினர்.
எங்க கேங்கல எல்லாருமே அதிமுகக்காரங்கதான். நாங்கள் ஒரே கேங்காக கூடி, சுற்றுவோம். மது அருந்துவோம். எல்லா கெட்ட பழக்கங்களும் எங்களுக்கு ஏற்பட்டது. எங்களுக்கு தலைவராக இருந்தது பார் நாகராஜ்தான். நாங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருப்போம்.
நாகராஜ் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு வந்தார். அவரது அப்பா சாதாரண நிலையில்தான் இருந்தார். அவரது அப்பாவும் அதிமுகவில் நகரத்தில் சிறிய பொறுப்பில் இருந்தார்.
இதனால் அவர் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டார். அவரது தீவிரத்தைப் பார்த்து நகர இளைஞர், இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் பதவி கிடைத்தது.
பின்னர் ஜெயலலிதா பேரவை பொறுப்பு கிடைத்தது. அவர் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றார். பொள்ளாச்சி விஐபிக்கும், அவரது மகன்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார்.
இதனால் பொள்ளாச்சி விஐபி அவருக்கு பார் நடத்த அனுமதி வாங்கிக் கொடுத்தார். முதலில் ஒரு பார் கிடைத்தது. அதன்பின்னர் 3 பார் கிடைத்தது.
நகரில் பார் திறக்காத நேரம் அதாவது காலை 6 மணிக்கே பாரை திறந்து மது விற்பனை செய்து வந்தார். நகரில் வேறு பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் திறந்தால் போலீசுக்கு தகவல் கொடுப்பார். போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால் நாகராஜை கண்டு கொள்ள மாட்டார்கள். இதனால் கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிரந்தரமாக அனுமதி இல்லாத பார் நடத்தத் தொடங்கினார்.
போலீசாருக்கும் முறையாக மாமூல் கொடுத்தார். இதனால் போலீசார் இவரை கண்டு கொள்ள மாட்டார்கள். அதிகமாக மாமூல் கொடுத்ததால், போலீஸ் நிலையத்தில் நாகராஜ் வைத்ததுதான் சட்டம்.
இதனால் நாங்கள் சின்ன சின்ன பிரச்னைக்கும் நாகராஜை தொடர்பு கொண்டோம். இதனால் போலீஸ் நிலையத்தை கட்டப்பஞ்சாயத்து இடமாக மாற்றிக் கொண்டார். எங்களுக்கு போலீசுடன் நெருக்கம் ஏற்பட்டதால் தவறுக்கு மேல் தவறு செய்ய ஆரம்பித்தோம்.
இதனால் பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்பினோம். இதனால் நாங்கள் போலியான பெயரில் குறிப்பாக பெண்களின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கி, பேச ஆரம்பித்தோம்.
அதில் பலரை எங்கள் வலையில் வீழ்த்தினோம். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டரையும் வீழ்த்தினோம். அவரிடம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை மிரட்டி வாங்கினோம்.
இதனால் அவர் போலீசில் வாய்மொழியாக புகார் கொடுத்தார். எழுத்து மூலமாக கொடுக்காததால், போலீசார் எங்களை மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு விடுவித்து விட்டனர்.
பார் நாகராஜ்தான் பஞ்சாயத்து செய்தார். அதன்பின்னர் எங்களுக்கு முழுமையாக பயம் போய்விட்டது. யாரும் எங்கள் மீது புகார் செய்யவில்லை.
இதனால் ஏராளமான பெண்களை எங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தோம்.
பெரும்பாலானவர்கள் இதைத்தான் தொழிலாள செய்து வந்தோம். அதில் பணமும் அதிகமாக கிடைத்தது.
எங்களைப்போலவே, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சபரிராஜனும், பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி உல்லாமாக இருந்து வந்தார்.
இந்த தகவல் ஒரு நண்பர் மூலம் எங்களுக்கு தெரிந்தது. இதனால், அவரை நாங்கள் காரில் தூக்கி வந்து, அடித்து உதைத்து அவரிடம் இருந்த 2 செல்போன்களை பிடுங்கினோம்.
அதில் இருந்த வீடியோக்களை பார்த்தோம். நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட பெண்களுடன், மாணவிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளோம்.
ஆனால் அவன் தனியாகவே 60 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை வைத்திருந்தான். அதை நாங்கள் எங்களது செல்போனுக்கு மாற்றிக் கொண்டோம்.
பின்னர் அதில் ஒவ்வொரு பெண்களாக தேர்ந்தெடுத்து, அவருக்கு எங்கள் முன்பு சபரிராஜனை பேசச் சொல்வோம். அவரும் பேசுவார்.
அந்த பெண்களை எங்கள் பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தவுடன், நாங்கள் இந்த வீடியோவை காட்டி எங்களுடன் உல்லாசமாக இருக்கச் செல்வோம். கடந்த 8 மாதத்துக்கு முன்னர், ஒரு பெண்ணை மிரட்டி நானும் 4 பேரும் உல்லாசமாக இருந்தோம்.
அப்போது பெண்ணின் சகோதரர் எங்களை தாக்கி, செல்போனில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழித்து விட்டு, எங்கள் மீது புகார் கொடுத்தார்.
போலீசார் எங்களுக்கு ஆதரவாக இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டனர். இந்த பஞ்சாயத்தை பார் நாகராஜ்தான் செய்தார்.
இதற்கிடையில், சபரிராஜனிடம் உள்ள பல காதலிகளை ஒவ்வொருவராக அழைத்து உல்லாசமாக இருந்து வந்தோம். சிலர் முரண்டு பிடித்தனர்.
அவர்களைத்தான் அடித்து, உதைத்து, பணம் பறித்து வந்தோம். அப்போது எங்கள் கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும், சபரிராஜன் காதலித்துள்ளார்.
அவரையும் ஒருநாள் எங்கள் பண்ணை வீட்டுக்கு எங்களது மிரட்டலுக்கு பயந்து அழைத்து வந்தார். எங்களைப் பார்த்தவுடன் நண்பரின் சகோதரி, கண்டுபிடித்து விட்டு ஓடிப்போய் நண்பரிடம் கூறிவிட்டார்.
இதனால் நண்பனும் அவனது உறவினர்களும் சேர்ந்துதான், சபரிராஜன், சதீஷ்,வசந்தகுமார், மணிகண்டன் மற்றும் என்னையும் தூக்கிக் கொண்டு போய் அடித்து உதைத்தனர்.
பின்னர் செல்போனை பறித்துக் கொண்டனர். எங்களை அடிப்பதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். 3வது முறையாக போலீசில் மாட்டினோம். இதற்கிடையில் இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்து பத்திரிகையில் வந்தது.
இதனால் போலீசார் என்னையும், மணிகண்டனையும் விடுவித்து விட்டனர். மற்ற 3 பேரையும் சிறையில் அடைத்தனர். நான் திருப்பதி, சேலம் ஆகிய இடங்களுக்கு சுற்றினேன். பின்னர் போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு சிபிசிஐடி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதன் மூலம் பார் நாகராஜ் உள்ளிட்ட 20 பேருக்கு இந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசுவிடம் உள்ள செல்போனில் உள்ள படங்களை வைத்தும், வாக்குமூலத்தில் கூறியவர்களையும் கைது நடவடிக்கைகளை தொடர சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனால் அடுத்தடுத்த நாட்களில் பொள்ளாச்சி விவகாரத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பிரமுகர் பார் நாகராஜிக்கு சொந்தமாக பொள்ளாச்சியில் கோட்டூர் ரோடு மேம்பாலம், சின்னாம்பாளையம், குஞ்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் பார்கள் உள்ளன.
இந்த பார்கள் அனைத்தும் ஏலம் விடப்படாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருபவை ஆகும். இது போலீசாருக்கு தெரிந்திருந்தும் மாமூல் கிடைத்து வருவதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோட்டூர் சாலையில் மேம்பாலம் அருகே இருந்த பார் பொதுமக்களால் சூறையாடப்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி கிழக்கு போலீசார் தாக்கப்பட்டது பார் என்று குறிப்பிட்டால் சிக்கிக்கொள்ள வேண்டும் என்பதாலும், பார் நாகராஜை காப்பாற்றும் வகையிலும் பாஸ்ட்புட் உணவகம் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
தஞ்சையில் ஆளுங்கட்சி விஐபி ஒருவருக்கு சொந்தமான வீட்டில் பார் நாகராஜ் கடந்த சில நாட்களாக தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனாலும் நாகராஜின் வீட்டிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செல்போன் சர்வீஸ் கடைகளில் விசாரணை:
ஆளுங்கட்சி விஐபிக்கள் தொடர்பான பலாத்கார வீடியோக்கள் உலா வர வாய்ப்பு உள்ளதாக பொள்ளாச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து செல்போன் சர்வீஸ் கடைகளில் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் செல்போன்களில் இருந்து ஏற்கனவே பல பலாத்கார வீடியோக்கள் நண்பர்கள் வட்டாரத்திற்குள் ஷேர் செய்யப்பட்டுள்ளதாகவும், அது போன்ற வீடியோக்கள் தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியானது என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் நண்பர்களை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார் சிலரிடம் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் பொள்ளாச்சியில் உள்ள சில செல்போன் சர்வீஸ் கடைகளில் இருந்து வீடியோக்கள் வெளியாகி இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து செல்போன் சர்வீஸ் கடைகளில் கடந்த 2 நாட்களாக போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஆளுங்கட்சி விஐபிக்கள் தொடர்பான வீடியோக்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 நாளில் 50 பேரிடம் விசாரணை
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் 3 நாளில் 50 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.