பேஸ்புக் காதலியை நம்பி வந்த ஜேர்மனியிலிருந்து வந்த நபர் 55 இலட்சம் ரூபா வை யாழில் பறிகொடுத்தார்
14 Mar,2019
யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர், பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்னை நம்பி 55 இலட்சம் ரூபா, பணம் நகை ஆகியவற்றை யாழில் பறிகொடுத்துள்ளார்.
குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறிகொடுத்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் வாழ்வதாகக் கூறி, பேஸ்புக் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண் காதலித்துள்ளார்.
அதனை நம்பி குறித்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய பேஸ்புக் காதலியும் அங்கு வந்து ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென ஒருநாள் பேஸ்புக் காதலி வீட்டிலிருந்த பணம், நகைகள், பொருட்கள் என சுமார் 55 லட்சம் ரூபாவை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.