ஆசை மகன்களை கொன்று, மலர் தூவி ஒப்பாரியும் வைத்தப் பின் தூக்கில் தொங்கிய தாய்ஸ!
21 Feb,2019
இந்தியா, கடலூர் அருகே பாதிரிகுப்பத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மனைவி, சிவசங்கரி. இவருக்கு 2 மகன்களும் உள்ளனர். 12 வயதான பாவேஷ் கண்ணா, 8 வயதான ரதீஷ் கண்ணாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இவர் மருந்துக்கடையொன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில காலமாகவே, கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றும் கணவன் மனைவிக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுமை இழந்த மதிவாணன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கணவன் வெளியே சென்றுவிட்டதால் நேற்று இரவு சிவசங்கரி தன் இரண்டு மகன்களுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த மயக்க மாத்திரைகளை மகன்களுக்கு கொடுத்துள்ளார். இதனால் மகன்கள் இருவரும் மயங்கியுள்ளனர். பின்னர் , ஆசை ஆசையாக வளர்த்த மகன்களை கொடூரமாக கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் சிவசங்கரி.
பின்னர், அவர்களுக்கு மலர் தூவி ஒப்பாரியும் வைத்துள்ளார் சிவசங்கரி.
பின்னர் தன் வீட்டில் தூக்கு மாட்டி சிவசங்கரியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து மதிவாணன் வீட்டிற்கு வந்துள்ளார். மதிவாணன் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் திறக்காததால் பக்கத்துவீட்டு நபரின் உதவியுடன் ஜன்னல் வழியாக பார்த்த போது, தூக்கில் தொங்கிய மனைவி சிவசங்கரி பார்த்து அவர் கதறியுள்ளார்.
பின்னர், அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு இரு மகன் தரையில் இறந்த நிலையிலும் உடல்கள் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும், கதறி அழுதுள்ளார்.
முன்னதாக சிவசங்கரி பொலிஸாருக்கும், உறவினர்களான அம்மா, தங்கை, மாமாவிற்கு என 4 கடிதம் தனி தனியாக எழுதி வைத்துள்ளார்
இந்த கடித்ததில் தன் கணவர் மதிவாணன் மிகவும் பொருமையானவர் எனவும், கணவருக்கு தான் அதிகளவு தொந்தரவு கொடுத்துவிட்டதாகவும் எனவே தான் சாகபோகிறேன் எனவும், தனது சாவுக்கும் தனது மகன்கள் சாவுக்கும் யாரும் கராணமில்லை எனவும் கடித்தை எழுதிவைத்துள்ளார்.
கணவருக்கு தொந்தரவு கொடுக்கூடாது என்பதால் தன் இரு மகன்களையும் தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் கடிதத்தில் சிவசங்கரி கூறியுள்ளார்.
சம்பவம், குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.