கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் - பாப்பாண்டவர் தகவல்
06 Feb,2019
கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் - பாப்பாண்டவர் தகவல்
தற்போதைய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும், உயர் குருவுமான பாபாண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் பல கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளக நடத்திவந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அவரது கருத்துப்படி, தனக்கு முன்னால் ப்பாப்பாண்டவராகக் கடமை புரிந்த பெனெடிக்ட் அவர்கள் இந்தப் பாலியல்க் கொடுமைகள் நிமித்தம் ஒரு கன்னியாஸ்த்திர்கள் சபையையே கலைத்துவிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார்.
கத்தோலிக்கத் திருச்சபையினுள் கன்னியாஸ்த்திரிகளுக்கெதிரான வன்கொடுமைகள் பற்றி இதுவே முதன் முதலாக ஒரு பாப்பாணடவரால் வெளிக்கொண்டுவரப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
பல ஆயர்களும் குருக்களும் தொடர்ச்சியாகக் கன்னியாஸ்த்திரிகளை வன்கொடுமை புரிந்ததாக கூறும் பாப்பாண்டவர், இதுபற்றி தாம் விசாரித்துவருவதாகவும் கூறியிருக்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பாப்பாண்டவர், கன்னியாஸ்த்திரிகளுக்கெதிரான வன்கொடுமைகள் பற்றி மேலும் கூறுகையில், தனக்கு முன்னாலிருந்தவர் மிகவும் துணிச்சலான முறையில் செயற்பட்டு ஒரு கன்னியாஸ்த்திரிகள் சபையினைக் கலைத்ததாகவும், இச்சபையினத் தாபித்தவர் மற்றும் பல குருக்கள் இச்சபயினைச் சேர்ந்த கன்னியாஸ்த்திர்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததினால் அதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
கன்னியாஸ்த்திரிகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை என்பது பரவலாக எப்போதுமே நடந்து வந்த்கிருந்தாலும்கூட, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபைகளிலேயே இவை அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.
கருக்கலைப்பினை கத்தோலிக்கத் திருச்சபை கடுமையாக எதிர்த்திருந்தாலும்கூட, பல ஆயர்கள் குருமாரின் சிசுக்களைக் கருவில் தாங்கிய பல கன்னியாஸ்த்திரிகள் வேறு வழியின்றி கருத்தடை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
கன்னியாஸ்த்திர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விமர்சித்துவரும் பத்திரிக்கை ஒன்று, மீ டூ செயற்பாட்டின்மூலம் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்த்திரிகள் தம்மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.