இருபத்தியாறு வயது இளைஞர் பரிதாப மரணம் .? பரடைசியாவில் புத்தக வெளியீடு
25 Jan,2019
டென்மார்க்கின் இன்றைய காலைச் செய்தியில் அதிக முக்கியம் பிடித்தது பராபின் ஓயில் என்ற திராவகத்தை உடலில் ஏற்றி மரணித்த 26 வயது பாடிபில்டர் ஒருவரிக் பரிதாப கதையாகும்.
பராபின் ஓயிலை ஏற்றுவதா.. ?
ஆம் அது ஒருவகை போதை வஸ்த்து போன்ற திராவகம். அதை உடலில் தொடர்ந்து ஏற்றி வந்தால் கைகளின் மசில்ஸ்கள் இயல்புக்கு மாறாக யானைக் கால்கள் போல பெருக்கும்.
இப்படி அழகு காட்டுவது இளைஞர்களுக்கு இன்றய தமிழில் சொல்வதானால் கெத்து..!
இறந்துவிட்ட இளைஞர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதை ஏற்றத் தொடங்கி விரைவான ஆணழகன் போல கட்டுடலை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் தவிடு நிறத்தில் அவர் உடலில் புதிய அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன. வைத்தியரிடம் சென்றால் அவர் ஏற்றிய பராபின் ஓயில் செய்த வேலை இப்போது வினையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இளைஞர் பரிதாப மரணத்தை தழுவினார். இது போல மேலும் பல மரணங்கள் வந்து கொண்டிருப்பதாக வைத்தியர் கூறுகிறார்.
தற்போது இதற்காக சிகிச்சை பெறும் இளைஞர் ஒருவர் கூறும்போது அன்று அதை பாவிக்க ஆரம்பித்தபோது இப்படி ஆபத்து வருமென யாரும் கூறவில்லை. இப்போதுதான் விளைவை கண்டுள்ளோம் என்று வருத்தத்துடன் கூறுகிறார். மிக மிக ஆபத்தானது நிறுத்துங்கள் என்கிறார்.
இப்போது இளைஞர்கள் பாடிபில்ட் செய்கிறோம் என்று அலைகிறார்கள்.. அவர்களுடைய கைகள் இயல்புக்கு மாறாக பெருத்திருந்தால் இப்படி ஏதாவது எண்ணையை ஏற்றுகிறீர்களா என்று விசாரிக்க வேண்டியதும் எச்சரிக்க வேண்டியதும் பெற்றோர் கடமையாகும்.
ஏனென்றால் இது உயிர் கொல்லி..
இதுபோல படிப்பறிவற்ற பல தமிழக நடிகர்களும் இந்த வேலையை செய்துள்ளனர் அவர்களுக்கு இதை யார் சொல்வதெனத் தெரியவில்லை.
இந்த செயற்கை மசில்ஸ் திடீரென கல்லுப்பற்றும்..
இயற்கையான உணவு தேகப்பயிற்சி இவையே சரியான வழி, குறுக்கு வழியில் எதை செய்தாலும் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். மோட்சத்தைக் கூட குறுக்குவழியில் அடைய முடியாது என்பதை புரியவேண்டும்.
டென்மார்க் பரடைசியாவில் புத்தக வெளியீடு
தற்போது இங்கிலாந்தில் வாழ்பவரும் முன்னர் ஜேர்மனியில் வாழ்ந்தவருமான புலம் பெயர் பெண் எழுத்தாளர் தீபதிலகையின் ( திருமதி. கிருஷ்ணவேணி ஸ்ரீகந்தவேள் )மகிழம்பூவும் அறுகம்புல்லும் என்ற நூல் வரும் ஞாயிறு மாலை 15.00 மணிக்கு பரடைசியா நகரில் உள்ள அலே பாடசாலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த வெளியீட்டை தற்போது டென்மார்க்கில் புதிதாக ஆரம்பித்திருக்கும் நிலாமுற்றம் என்ற கவிஞர்கள் குழு கொண்ட அமைப்பு நடத்துகிறது. இது இவர்களுடைய கன்னி முயற்சியாகும்.
தாயகத்தில் தீவகத்தை பிறப்பிடமாகக் கொண்ட தீபதிலகை தான் வாழ்ந்த பகுதிகளை பின்னணியாக கொண்டு அரசியல் சமூகம், வரலாறு கொண்ட புதுவிதமான தோற்றப்பாடு கொண்ட நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
தமிழகம் உட்பட பல நாடுகளிலும் இதன் வெளியீடுகள் நடைபெற்று பாராட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் டென்மார்க்கிலும் நடை பெறுகிறது. இந்த நிகழ்வுக்கு சுவிற்சலாந்து நாட்டில் இருந்து வருகைதரும் கங்கைமகன் தலைமைதாங்குகிறார்.
டென்மார்க்கின் எழுத்தாளர்கள் அ. ஜீவகுமாரன், ஜஸ்டின் கெனடி, கி.செ.துரை உட்பட பலர் பேசுகிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பின்னதாக ஓர் இனிய இலக்கிய நிகழ்வாக இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமல்ல, செழிப்பான ஒரு சமுதாயம் துளிர்த்து வளர வேண்டுமென நினைத்தால் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியது அவசியம்.
வீணான வரட்டுத்தனப் போக்குகளால் சமுதாயத்தை இருட்பாதைக்கு கொண்டு சென்றது போதும் இனியாவது ஜீவனுள்ள முயற்சிகள் வளர்க்கப்பட வேண்டும் என்ற சமுதாய புரட்சி தமிழ் மக்களிடையே மலரும் காலத்தில் இது நடைபெறுகிறது.
வாரம் ஒரு தடவை நூல் வெளியீடு, இலக்கிய நிகழ்வென்று செழித்துக்கிடந்த ஒரு நாடு இன்று எதுவும் இன்றி கிடக்கிறது. கடந்த காலத்தை பேசுவதில் பயன் இல்லை..
இவைகள் மறுமலர்ச்சி என்றாலும் பாராட்டப்படவும், பங்கேற்கவும் உரிய நிகழ்வுகளாகும்.
இயந்திர வாழ்வால் அழிந்தும், அழிக்கப்பட்டும், தவறுகளை தொலைக்காட்சிகளை பார்த்து சரியென மயங்கிக் கொண்டிருக்கும் டென்மார்க்கின் தமிழ் கலைகளை மீட்போம்..
TKS.DURAI