புதிய தீவுகளை டென்மார்க்உருவாக்க திட்டம் -
07 Jan,2019
சர்வதேச அளவில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
புதிய தீவுகள்
தலைநகர் கோபன்ஹேகன் அருகே 9 புதிய தீவுகளை உருவாக்குவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது டென்மார்க் அரசு.
புதிய வணிகங்களை தொடங்குவதற்கான இடத்தை இந்த தீவுகள் வழங்கும். பிற நோர்டிக் நகரங்களுடன் முதலீட்டைக் கவர்வதில் இந்த தீவுகளும் ஈடுபடும். 2040க்குள் இத் தீவுகள் தயாராகும். 70 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளர்ச்சித் திட்டத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. இதற்கு இன்னும் நிதி ஒதுக்கீடு நடைபெறவில்லை.