டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டு பெருவிழா
02 Jan,2019
டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் 11 வது சைவத்தமிழ் பெருவிழா 2018 வரும் சனிக்கிழமையன்று பி.ப. 14.00 மணிக்கு பரடைசியா நகரில் உள்ள அலே பாடசாலையில் நடைபெற இருக்கிறது.
சென்ற ஆண்டு சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் பத்தாவது ஆண்டு விழா நிறைவை சிறப்பாக நடத்திய கவிஞர் வாழ்நாள் சாதனையாளர், சைவப்புனிதர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இப்போது இல்லை. அவருடைய அரங்கில் இந்த விழா நடைபெற இருப்பது சிறப்பாகும்.
பிரதம விருந்தினராக தத்துவாமிர்த மணி சிவஸ்ரீ வசந்தன் குருக்கள் அவர்களும், சிறப்பு விருந்தினராக சைவச்சிரோன்மணி திரு. சொ. பேரின்பநாயகம் அவர்களும், கௌரவ விருந்தினராக சமூகத்தொண்டர் புரவலர் திரு. சத்தியரூபன் மகாதேவன் (சிவகாமி அறக்கட்டளை – இலண்டன்) கலந்து பெருமை தருகிறார்கள்.
அத்தருணம் நடனங்கள், நாடகங்கள், தெய்வீககானம், பண்ணிசை, இன்னிசை உட்பட பல்வேறு நிகழ்வுகள் அரங்கை சிறப்பிக்கவுள்ளன.