2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – சிம்மம்-கடகம்-மிதுனம்-ரிஷபம்

25 Dec,2018
 

 
சிம்மம்
ராசிக்கு 3-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். ராசிக்கு 5-ல் புதன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பிரபலங்களின் தொடர்பு பயனுள்ளதாக அமையும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர் களும் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதப்போக்கு மாறும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள்.
12.2.19 வரை ராசிக்கு 6-ல் கேது இருப்பதால், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உண்மையான மனநிலையைப் புரிந்துகொள்வீர்கள். மகான்கள், ஆன்மிக அறிஞர்களின் சந்திப்பும் அவர்களுடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆனால், ராசிக்கு 12-ல் ராகு இருப்பதால், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள். கடந்த கால ஏமாற்றங்களை எண்ணி அடிக்கடி வருந்துவீர்கள்.
13.2.19 முதல் வருடம் முடியும் வரை, கேது 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உற்சாகமூட்ட முயற்சி செய்யவும். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சற்று தாமதமாக முடியும். பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால், ராகு 11-ல் இருப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வளரும். மக்களுக்குச் சேவை செய்வீர்கள்.
வருடம் முழுவதும் சனி 5-ல் இருப்பதால், அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளை களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் தாமதமாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டாம்.
ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்கும்போது வருடம் பிறப்பதால், உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 4-ல் இருப்பதால், வேலைச்சுமை இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசிக்கு 5-ல் அமர்ந்தும் திகழ்வதால், மன இறுக்கங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு ஏற்படும். வருமானத்தை உயர்த்திக்கொள்ள புது வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில், இழந்த செல்வாக்கு திரும்பக் கிடைக்கும்.
வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிக்கவும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அரிசி, மலர்கள், எலெக்ட்ரிகல்ஸ், வாகன உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! பிப்ரவரி 13-ம் தேதி முதல் ராகு சாதகமாக இருப்பதால், அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால், பணிச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதல் பணிகளை ஒப்படைப்பார்கள். சலித்துக் கொள்ளாமல் முடித்துக்கொடுப்பது நல்லது. உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. பதவி உயர்வு தள்ளிப்போகும். சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்களே! படிப்பில் முழுமையான கவனம் செலுத்தவேண்டியது அவசியம். பொறுப்பு உணர்ந்து படித்தால்தான் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். விளையாடும்போது கவனமாக இருக்கவும்.
மொத்தத்தில், இந்தப் புது வருடத்தின் தொடக்கம் அலைச்சலைத் தருவதாக அமைந்தாலும், ஜூன் – ஜூலை மாதம் முதல் முன்னேற்றம் மற்றும் ஆதாயம் தருவதாக அமையும்.
பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை, சஷ்டி திதி நாளில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; மகிழ்ச்சி பெருகும்.
 
2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – கடகம்

ராசிக்கு 4-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கிய பிரமுகர்களின் வரிசையில் இடம்பிடிக்கும் அளவுக்கு சாதிப்பீர்கள்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரைகுறையாக தடைப்பட்டு நின்றிருந்த கட்டடப் பணிகள் மீண்டும் தொடங்கும். அதற்கு வங்கிக்கடன் கிடைக்கும். தாய்மாமன், அத்தை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

வருடம் பிறக்கும்போது செவ்வாய் 9-ல் இருப்பதால் தொட்டது துலங்கும்; புதிய முயற்சிகள் வெற்றியடையும். முன்தொகை கொடுத்து வைத்திருந்த சொத்துக்கு, மீதித் தொகையையும் கொடுத்து பத்திரப்பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
12.2.19 வரை ராசிக்கு 7-ல் கேதுவும் ராசிக்குள் ராகுவும் நிற்பதால், உடல்நலக் குறைபாடு உண்டா கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு  12-லும், கேது 6-லும் இருப்பதால், மனப் போராட்டம் ஓயும். கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள். உற்சாகம் பிறக்கும். மற்றவர்களை சரியாகப் புரிந்து கொள்வீர்கள்.
ராசிக்கு 6-ல் புதன் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வருடத் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.20.19 வரை குரு ராசிக்கு 5-ல் இருப்பதால், நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர் கல்வி, உத்தியோகம் சிறப்பான முறையில் அமையும். குலதெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள்.
13.3.19 முதல் 18.5.19 வரை மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், சின்னச் சின்ன வேலைகளையும் போராடித்தான் முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர் களுடன் நேசத்துடன் பழகுங்கள். எவருடனும் வீண் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
வருடம் முழுவதும் ராசிக்கு 6-ல் சனி இருப்பதால், எதிரிகளும் நட்பு பாராட்டுவார்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். புது வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் ஏற்படும்.
வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்கள் சற்று முரண்டுபிடிப்பார்கள். லாபத்தைக் குறைத்து விற்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். கமிஷன், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! உங்களுக்குப்  பணிச் சுமை அதிகரிக்கும். பிப்ரவரி 13-ம் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள்மீது வீண்பழி சுமத்திய அதிகாரி மாற்றப்படுவார். புதிதாக வரும் அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! புதுமையாகச் சில படைப்பு களை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புது வருடத்தின் முற்பகுதி, உங்களுக்கு அலைச்சலையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், வருடத்தின் பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், இளநகர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீஉமையாம்பிகை சமேத ஸ்ரீஉடையீஸ்வரரைப் பிரதோஷ நாளில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; பிரச்னைகள் அகலும்.
2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – மிதுனம்

புது வருடம் பிறக்கும்போது ராசிக்கு 5-ல் சந்திரனும் சுக்கிரனும் இருப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கிடைக்கும்.
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குக் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும்.

வருடம் பிறக்கும்போது செவ்வாய் 10-ல் இருப்பதால் புதுப் பொறுப்பும் பதவியும் தேடி வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாய்வழி உறவுகளின் மத்தியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
சூரியனும் ராசிநாதன் புதனும் 7-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், புதிய சிந்தனைகள் பிறக்கும். நீண்டநாள் பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். 
12.2.19 வரை ராசிக்கு 2-ல் ராகு மற்றும் 8-ல் கேது இருப்பதால், எதிலும் பிடிப்பற்ற போக்கு காணப்படும். பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். வழக்குகளில் தீர்ப்பு தாமதமாகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால், மற்றவர்களிடம் அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சின்னச் சின்னப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தி உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். 
 
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; பிறகு 19.5.19 முதல் 27.10.19 வரை ராசிக்கு 6-ல் குரு இருப்பதால், வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய ஃபைல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கவும் இருப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும். தள்ளிப் போன திருமணம் கூடிவரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள்.
வருடம் முழுவதும் சனி 7-ல் கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் – மனைவிக்கிடையே வீண் சந்தேகத்தின் காரணமாக பிரிவு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பொருள்கள் களவு போக நேரிடும் என்பதால் கவனம் தேவை. பணப் பற்றாக்குறை இருந்தபடி இருக்கும்.
வியாபாரிகளே! வியாபாரம் செழிக்கும். வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.  உங்களில் சிலர், வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருப்பவர்களின் உதவியுடன் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். ஏற்றுமதி – இறக்குமதி, காய்கறி, ஹார்ட்வேர்ஸ் வகைகளால் ஆதாயம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! உங்கள் தொலை நோக்குச் சிந்தனைகள் பலராலும் பாராட்டப்படும். அதிகாரிகளுடன் சின்னச் சின்ன மனக்கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். பதவி உயரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாறுதல் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும்.
மாணவர்களே! படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கலை, இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கலைத்துறையினரே! உங்கள் கலைத்திறன் வளரும். பாராட்டுகளுடன் பரிசுகளும் கிடைக்கும்; மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
மொத்தத்தில் இந்தப் புது வருடம், உங்களின் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம், நஞ்சைமகத்துவாழ்க்கை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாளியம்மனை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபடுங்கள்; வசதி வாய்ப்புகள் பெருகும்

 

2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – ரிஷபம்

ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நழுவ விடாமல் பயன்படுத்தி  முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.
வருடம் பிறக்கும்போது ராசிக்கு 11-ல் செவ்வாய் இருப்பதால்,செல்வம், செல்வாக்கு உயரும். அனுபவத்தைப் பயன்படுத்தி காரியம் சாதிப்பீர்கள். முக்கியமான சில முடிவு களைத் துணிந்து எடுப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.2.19 வரை கேது 9-ல் இருப்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் மன வருத்தங் களும் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனால், 3-ல் ராகு இருப்பதால் துணிச்சல் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை வேண்டாம். யதார்த்தமாகப் பேசுவதைக் கூட, சிலர் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடவேண்டாம்.
சுக்கிரன் 6-ல் இருக்கும் நேரத்தில் புது வருடம் பிறப்பதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் வீண் பிரச்னைகள் வேண்டாம்; அனுசரணையாக இருப்பது அவசியம்.
இந்த வருடம் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 7-ல் இருந்துகொண்டு ராசியைப் பார்ப்பதால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.
13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை 8-ம் இடத்தில் மறைந்தும் குரு திகழ்வதால், உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் ஏற்படும். திடீர்ப் பயணங்களால் உடல் அசதி உண்டாகும். அவசியமான செலவுகள் அதிகரித்தபடி இருக்கும். முக்கிய ஆவணங்களைக் கையாள்வதில் கவனம் தேவை. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். யாருக்கும் எதற்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம்.
இந்த வருடம் முழுவதும் அஷ்டமச் சனி தொடர்வதால், அடிக்கடி கோபம் ஏற்படும். கடந்த கால ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வெளி நபர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டாம்.  மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.
வியாபாரிகளே! வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி முதலீடு செய்யவேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். வேலையாள்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் பிரிவு ஏற்படக்கூடும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் நிலையற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதே நல்லது. அதிகாரிகள் குறை கூறினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களின் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். அவதூறு வழக்குகளும் ஏற்படக்கூடும்.
மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் ஏற்படக்கூடும். உங்களின் படைப்புகளை ரகசியமாக  வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தப் புது வருடம் சுற்றியிருப்பவர்களின் சுயநலப் போக்கை உணரவைப்பதுடன், சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
பரிகாரம்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை, கிருத்திகை நட்சத்திரத்தில் தரிசித்து வழிபடுங்கள்; வாழ்வு சிறக்கும்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies