மீனம்
சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருக்கும் வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் உதவி கிடைக்கும்.
ஆனால், சந்திரன் 8-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வறட்டு கௌரவத்துக்காக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.
செவ்வாய் ராசியில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 12.2.19 வரை லாப வீட்டில் கேது இருப்பதால், எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனவலிமை கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். ராகு 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.
13.2.19 முதல் வருடம் முடியும் வரை, ராகு 4-லும் கேது 10-லும் அமர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும்.
வருடம் முழுவதும் சனி 10-ல் இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனாலும், உத்தியோகத்தில் சில பிரச்னைகள், வீண்பழிகள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செலவு களைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பதால், சுபநிகழ்ச்சிகள் அதிகரிக்கும்.
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனை களை ஏற்றுக்கொள்வார்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதிக வட்டிக் கடனைத் தந்து முடிப்பீர்கள். நீண்டநாள் களாகச் செல்ல நினைத்த வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள்.
13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு 10-ல் அமர்வதால், சிறுசிறு அவமானங்கள் ஏற்பட்டு நீங்கும்.
பழைய பிரச்னைகள் மறுபடியும் தலைதூக்குமோ என்பது போன்ற அச்ச உணர்வு ஏற்படும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்தப் பார்ப்பார்கள். மற்றவர் களுக்கு அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம்.
வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர் களைக் கவருவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். அனுபவம் மிக்க வேலையாள்கள் பணியில் சேருவார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். விரும்பியபடி கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல்பொருள் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
உத்தியோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகரிக் கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை முடிப்பதில் சுணக்கம் காட்ட வேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்களைச் சரியாகப் புரிந்து கொள்வீர்கள். நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வீர்கள்.
கலைத்துறையினரே! உழைப்புக்கு ஏற்றப் பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புது வருடம், உங்களின் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றிகளை ஈட்டித் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் தரிசித்து வழிபடுங்கள்; தடங்கல்கள் நீங்கி, நன்மைகள் கைகூடும்.
2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – கும்பம்
உங்கள் ராசிக்குப் பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளும் ஏற்படும். முக்கிய பிரமுகர் களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
வருடம் பிறக்கும்போது, செவ்வாய் 2-ல் இருப்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசிப் பழகுவது அவசியம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.
12.2.19 வரை கேது 12-ல் தொடர்வதால், நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். சில நாள்களில் தூக்கம் குறையும். ஆனால், ராகு 6-ல் இருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது நிகழ்ச்சி களில் கௌரவிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
13.2.19 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ல் இருப்பதால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
வருடம் முழுவதும் சனி லாப வீட்டில் தொடர்வதால், வசதி வாய்ப்புகள் பெருகும். பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கவும், புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு, வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணி நிரந்தரமாகும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு ராசிக்கு 10-ல் இருப்பதால், அதிக வேலைகளால் உடல் அசதி உண்டாகும். மறைமுக அவமானம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கல்வியாளர் களின் நட்பால் தெளிவு அடைவீர்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
வியாபாரிகளே! அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப்பிரிவில் சேர சிபாரிசு தேவைப்படும்.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அனுபவம் மற்றும் சமயோசித அறிவால் பெரும் வெற்றிகளைப் பெற்றுத்தரும் ஆண்டாக அமையும்.
பரிகாரம்: கோவை மாவட்டம், வடவள்ளி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாட்டு விநாயகரை, சதுர்த்தி திதி நாளில் தரிசித்து வழிபடுங்கள்; சங்கடங்கள் நீங்கும்.
2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – மகரம்
ராசிக்கு 10-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.
சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். மற்றவர் களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வீடு, வாகன வசதிகள் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
செவ்வாய் 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கடனாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாகத் தேடியும் கிடைக்காத முக்கிய ஆவணம் கைக்குக் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
12.2.19 வரை ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால், குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள், உடல்நலக் குறைபாடுகள் வந்துபோகும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை, கேது 12-லும் ராகு 6-லும் இருப்பதால், மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வந்து சேரும்.
வாழ்க்கைத்துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
வருடம் முழுவதும் விரயச் சனி நீடிப்பதால், அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. கடன்களால் கௌரவம் குறைந்துவிடுமோ என்று அடிக்கடி கவலைப்படுவீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை குரு லாப வீட்டில் இருப்பதால், உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். புதுப் பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமா கவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு 12-ல் மறைவதால், வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். மற்றவர்களுக் காக ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். சிலருக்கு, திடீர் பயணங்களும் உங்களைப் பற்றிய வதந்திகளும் ஏற்படும். பழைய கடன்களை நினைத்து கவலைப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
வியாபாரிகளே! விரயச் சனி தொடர்வதால், புதுத் தொழில் தொடங்குவதைத் தவிர்ப்பதுடன், பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை செயல் படுத்துவீர்கள். தள்ளிப்போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள்கள் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கவேண்டி வரும். ஆனாலும், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இழந்த சலுகை களை திரும்பப் பெறுவீர்கள்.
மாணவர்களே! படிப்பதுடன் படித்தவற்றை மறுபடி எழுதிப் பார்ப்பதும் அவசியம். கடினமாக உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படு வீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில், இந்தப் புது வருடத்தில் தடைகள் ஏற்பட்டாலும், உங்களின் விடாமுயற்சியால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீலட்சுமிகோபாலரை, சனிக் கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வெற்றிகள் குவியும்.
2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – தனுசு
ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும்.
பாதியில் நின்றுவிட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வாய்ப்பு ஏற்படும். அறிஞர்களின் நட்பால் தெளிவு பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
12.2.19 வரை ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனம் தெரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். கண், காது, பல் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. 13.2.19 முதல் வருடம் முடியும் வரை, ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். தூக்கம் குறையும். கணவன் – மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.
வருடம் முழுவதும் ஜன்மச் சனி தொடர்வதால், அடிக்கடி பழைய கசப்பான நிகழ்ச்சிகளை நினைத்து உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறான விமர்சனங் களை மறக்கப் பாருங்கள். படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர், கண் பரிசோதனை செய்ய வேண்டியது இருக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் ஏற்படும். மற்றவர்களை எடுத்தெறிந்து பேசவேண்டாம். வழக்குகளால் கவலை ஏற்பட்டு நீங்கும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால், திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கொஞ்சம் சிக்கனத்தைக் கடைப் பிடிப்பது அவசியம். சிலருக்குத் தூக்கமின்மை, படபடப்பு, கனவுத்தொல்லை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும்.கும்பாபிஷேக வைபவங்களில் கௌரவம் கிடைக்கும். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு உங்கள் ராசியில் ஜன்ம குருவாகத் திகழ்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாயுக்கோளாறு வந்து நீங்கும். உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் கணவன் – மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இனம் தெரியாத சின்னச் சின்ன கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.
வியாபாரிகளே! லாபம் சுமாராகத்தான் இருக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாள்களால் சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்படக்கூடும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும், ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகப் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். ஆனால், ஜன்மச் சனி தொடர்வதால், மனதில் இனம் தெரியாத அச்ச உணர்வு இருந்தபடி இருக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.
மாணவர்களே! படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அவ்வப்போது தூக்கம், மறதி ஏற்பட்டு நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர அதிக செலவு செய்யவேண்டி வரும்.
கலைத்துறையினரே! உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடக்கும் உங்களின் படைப்பு வெளியாக முக்கியப் பிரமுகர்கள் உதவி செய்வார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மையை அளிப்பதுடன், அதன் மூலம் வெற்றபெற வைப்பதாகவும் அமையும்.
பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீசரபேஸ்வரரை, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசித்து வழிபடுங்கள்; மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.