நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு - பாதிக்கப்பட்டவர்கள் 2526 ஆக உயர்வு

02 May,2020
 

 

 
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மேலும் இரண்டு வார காலங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பரவலைக் கட்டுப்டுத்த நாடு முழுவதும் 40 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு உத்தரவு காலம் நிறைபெறவுள்ளநிலையில், மேலும் இரண்டு வார காலத்துக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வார காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. அதற்காக, கொரோனா பாதிப்பின் அடிப்படையில் சிகப்பு, ஆரஞ்ச், பச்சை நிற மண்டலங்காக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பல துறைகளில் தளர்வு அளிக்கப்படுகிறது. மூன்று மண்டலங்களிலும் ரயில், விமானம், மெட்ரோ ரயில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மத வழிபாடு தலங்கள், திருமணம் திரையரங்குகள், சமூக, அரசியல் நிகழ்வுகள் தடை செய்யப்படுகிறது. மால்கள், சலூன், உணவகங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை மிரட்டும் கொரோனா: ஐந்து மண்டலங்களில் மொத்தம் 100-ஐக் கடந்தது பாதிப்பு!
சென்னையில் கொரோனா தொற்றால் ஐந்து மண்டலங்களில் 100 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னையில் ராயபுரம், திரு,.வி,க.நகர், தேனாம்பேட்டையைத் தொடர்ந்து, தற்போது தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று உறுதி செய்யப்பட்ட 203 தொற்றுகளில் 176 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1082 நபர்களில், 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தொற்று எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கிறது. சென்னையில் இன்று அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 48 நபரும், தண்டையார்பேட்டையில் 24 நபரும், வளசரவாக்கத்தில் 20 நபரும், கோடம்பாக்கத்தில் 19 நபரும், ராயபுரத்தில் 17 பேரும், அண்ணாநகரில் 6 பேரும், அமபத்தூரில் 6 நபரும், திருவொற்றியூரில் 3 நபரும், மணலி, அடையாறில் தலா ஒருவரும் பாதித்து உள்ளனர்.
குணமடைந்தவர்கள்
சென்னையில் தண்டையாபேட்டை, திரு.வி.க.., நகர், வளசரவாக்கத்தில் தலா ஒருவர் என மூன்று பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மண்டலம் வாரியாக
இதுவரை திரு.வி.க நகரில் 259 பேரும்,  ராயபுரத்தில் 216 பேரும்,  தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும், அண்ணாநகரில் 91 பேரும் பாதித்து உள்ளனர். மேலும், வளசரவாக்கத்தில் 60 பேரும், அம்பத்தூரில் 33 பேரும், அடையாறில் 21 பேரும்,  திருவொற்றியூரில் 19 பேரும்,  ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 4 பேரும்,  சோழிங்கநல்லூரில் 3 பேரும், மணலியில் 3 நபரும் உள்ளனர்.
சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63.01% பேரும், பெண்கள் 36.99% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வயது வாரியாக பார்க்கையில்
30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 237 பேருக்கும், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 242 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேல் 13 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 109 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 195 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 137 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 81 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 28 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைக்காட்சி வாயிலாக விளக்கமளித்தார். அவர், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526ஆக அதிகரித்துள்ளது. அதில், சென்னையில் மட்டும் 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கும், திருவள்ளூரில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3,200 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies