ஆளில்லா விமானம் மூலம் ஆயுத விநியோகம்: பாகிஸ்தான் மீது பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு
26 Sep,2019
பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை விநியோகித்து வருவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலம் தார்தரன் மாவட்டம், சோலா சாகிப் கிராமத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், செயற்கைகோள் தொலைபேசி, கள்ளநோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதை பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதேபோல் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை பாகிஸ்தான் விநியோகித்துள்ளதாக அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க பஞ்சாப் பொலிஸார் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.