சந்திராயன் 2 விண்கலம் இன்னும் சிலமணி நேரத்தில் சந்திரனில்
07 Sep,2019
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் இன்னும் சிலமணி நேரத்தில் சந்திரனில் தரையிறங்க இருப்பதால் அந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை நேரில்
பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு வந்தார். அவரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா வரவேற்றார்.
முதல்வர் எடியூரப்பாவின் வரவேற்பை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி அதன்பின்னர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் சென்றார். பிரதமர் மோடியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் அங்கு மாணவர்களுடன் அமர்ந்து இன்று இரவு நிலவில் சந்திரயான் 2 விண்கலம் இறங்குவதை பார்வையிடுகிறார்.
சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நாளை அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் சந்திரனின் தென்துருவ பகுதியில் தரையிறங்கவுள்ளது. அதன்பின்னர் அதில் உள்ள ரோவர் சில மணி நேரங்களில் நிலவில்