பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டமை தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது – தமிழிசை
22 Aug,2019
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டடுள்ளமை தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பா.சிதம்பரத்தின் கைது குறித்து தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை பூட்டிக் கொண்டு திறக்காமல் இருந்ததால் தான் சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று அவரை கைது செய்யும் சூழல் ஏற்பட்டது.
இதுபோன்று சிதம்பரம் நடந்து கொண்டது வியப்பாக இருக்கிறது. இவ்வாறு நடந்ததற்கு அவரே பொறுப்பு எனக் கூறினார்