ரயில்வே நிலையத்திற்குள் வந்த ஆட்டோ!
08 Aug,2019
மும்பையில் விரார் ரயில் நிலைய பிளாட்பாரத்திற்குள் திடீரென ஆட்டோ ரிக்சா ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரசவ வலியால் துடிக்கும் தமது மனைவியை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்ற ஒருவர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மருத்துவனைக்கு அவசரமாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைக் கண்டு அந்த ஆட்டோ ஓட்டுனர் ரயில்வே பிளாட்பாரத்திற்குள் ஆட்டோவை ஓட்டி வந்து ரயிலைப் பிடித்து அந்த கர்ப்பிணிப்பெண்ணை அவர் கணவருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ரயில் பயணிகளும் அவர்களுக்கு உதவி செய்தனர். அப்பெண் மிகவும் வலியால் துடிப்பதைக் கண்டு ரயில்வே போலீசாரும் அவர்களைத் தடுக்கவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.