இந்தியாவில் 25 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு நடவடிக்கை
28 Jul,2019
இந்தியாவிலுள்ள விமான நிலையங்களில், 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குரு பிரசாத் மொகபத்ரா, ஊடகவியலாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ளார், “வருடத்துக்கு 10- 15 இலட்சம் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்கள் பராமரிப்பை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.