இலங்கைக்கு வெடிமருந்தை கொண்டு வர இருந்த இந்திய நபர் ?
15 Jul,2019
இராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகள் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாடானை அடுத்த தொண்டி கடற்கரைப்பகுதியில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரை சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடமிருந்த 65 ஜெலட்டின் குச்சிகள், 44 டெட்டனேட்டர்கள் மற்றும் 5மீட்டர் நீளத்திலான வயர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர், புதுக்குடிப் பகுதியை சேர்ந்த மீனவர் வீரபத்திரன் என்பதும், மீன்பிடிக்கப் பயன்படுத்துவதற்காக வெடிமருந்துகளை வைத்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவை மீன் பிடிக்க பாவிக்கப்படும் வெடி மருந்து அல்ல என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில். இவை இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட இருந்த பொருட்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.